நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திருத்தம் ஒருகட்சி ஆட்சிக்கு வழிவகுக்கும் – சஜித் எச்சரிக்கை

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும் உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவானது, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் ஒருகட்சி சர்வாதிகார கட்டளை ஆட்சியை நிறுவுவதற்கான ஒரு முயற்சியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

 பகிரங்க விரிவுரையில் உரையாற்றிய பிரேமதாச, இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலவீனப்படுத்துகிறது, நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது மற்றும் ஜனநாயகத்தை அழிக்கிறது என்று கூறினார்.

நிறைவேற்று அதிகாரக்கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்காமல் அரசாங்கம் ஏன் இந்தத் திருத்தத்தை மட்டும் முன்னெடுக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டபோது அமைச்சர்கள் இத்தகைய திட்டத்தை மறுத்ததாகவும் குறிப்பிட்டார்.

மக்னா கார்ட்டா (Magna Carta) மற்றும் இடைக்கால ஆங்கிலப் பொதுச் சட்டத்தில் இருந்து 1787 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசியல் அமைப்பு, 1948 ஆம் ஆண்டின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் மற்றும் 1985 ஆம் ஆண்டின் நீதித்துறை சுயாதீனம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் வரையிலான சர்வதேச முன்மாதற்சிகளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரேமதாச, அதிகாரப் பகிர்வு மற்றும் சோதனைகள்-சமநிலைகள் (checks and balances) மூலமே ஜனநாயகம் வலுப்பெறுகிறது என்று வாதிட்டார்.

நீதித்துறை எந்தளவுக்குச் சுயாதீனமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ஜனநாயகம் பலமடையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஏனையோர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த போதிலும், சர்வாதிகார ஒருகட்சி ஆட்சியை உறுதிப்படுத்த உழைத்து மக்கள் ஆணையைத் துரோகம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எனத் தாம் அழைக்கும் இத்தகைய முயற்சிகளைத் தோற்கடிக்கக் கட்சி மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து பொதுமக்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற நிறுவனங்களிடமிருந்து அழுத்தங்களைத் தூண்டலாம், பொருளாதாரச் சவால்களை உருவாக்கலாம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ போன்ற வரிச்சலுகைகளைப் பாதிக்கலாம் என்றும் பிரேமதாச எச்சரித்தார். இவைகளின் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், தவறான நடவடிக்கைகள் மக்களின் சக்தியால் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“நீதித்துறையின் சுயாதீனம் சீர்குலைக்கப்பட்ட காலம் மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கக் கூடாது,” என்று பிரகடனப்படுத்திய பிரேமதாச, ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் ஆகிய இரண்டையும் பாதுகாப்பதே இந்த நிகழ்வின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை