நிவாரணங்கள் தொடர்பான மோசடிகளை தவிர்க்க விசேட திட்டம்!

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது: பல தரப்பினரும் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்.

இருப்பினும், அனைவரும் ஒரே வகையான உதவிகளை வழங்குவது மக்களின் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யாது. மாவட்டச் செயலகங்கள் ஊடாகத் தேவைகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

சில இடைத்தரகர்கள் அல்லது குழுக்கள், உதவிகளை வழங்குவதாகக் கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்குப் பெயரளவில் மட்டும் சிறிய உதவிகளை வழங்கிவிட்டுப் ஒளிப்படங்களை அனுப்புவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான மோசடிகளைத் தடுக்க, நன்கொடையாளர்கள் மாவட்டச் செயலகத்தின் ‘தேவைப் பட்டியலை’ பெற்றுக்கொண்டு உதவிகளை வழங்குவதே சிறந்தது. அரசாங்கம் அத்தியாவசிய நிதியையும் நிவாரணங்களையும் வழங்கி வருகிறது.

எனவே, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால், மக்களுக்குத் தேவைப்படும் ஏனைய உதவிகளை அரச சார்பற்ற நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் வழங்குவது பொருத்தமாக இருக்கும். மக்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், அவர்களின் தேவைகள் மாறுபடும்.

வாழ்வாதார உதவிகள் மற்றும் மீள்குடியேற்றத் தேவைகளை அறிந்து உதவுவது அவசியம். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண நிதியத்துக்கும் புலம்பெயர் உறவுகள் நம்பிக்கையுடன் நிதியுதவிகளை வழங்கி வருவதாக ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் ஐ.நா. முகவர் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், தமது நிவாரணப் பணிகளை மாவட்டச் செயலகங்களின் ஒருங்கிணைப்புடனேயே முன்னெடுப்பதாக உறுதியளித்தனர்.

அத்துடன் தொடர்புகளுக்கு – இடர் முகாமைத்துவக் குழுவின் மாவட்ட ரீதியான இணைப்பாளர்களான யாழ்ப்பாணம்:

சுரேந்திரநாதன் – 077 484 0199

கிளிநொச்சி: அஜித்தா – 077 565 0671

மன்னார்: பிரதீப் – 071 990 5324

வவுனியா: கமலதாசன் – 077 613 8369

முல்லைத்தீவு: ரஜினிகாந்த் – 077 370 7720 கோகுலராஜ் – 077 395 7886 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆளுநர் அறிவித்துள்ளார்.

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.