இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான ஐந்தாவது சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதி பெற்றுள்ளது.
சிற்றி சார்பாக ஓமர் மர்மெளஷ் இரண்டு கோல்களையும் சவின்ஹோ ஒரு கோலையும் பெற்றனர். நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹாவி பார்ன்ஸ் பெற்றிருந்தார்.