நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக இன ரீதியான பாகுபாட்டுக்கு தீணி போடுபவர்களாகவே செயற்பட்டனர். இப்படியானவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் எதற்கு? எனவே, ஓய்வூதியம் தேவையில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன – அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் டி சில்வா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தனியார் ஊடகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. ஊடக நிறுவனங்கள் மூடப்படுதல், ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் செலுத்தப்படாமைஈ முறையாக சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

ஆனால் தனியார் ஊடக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக இயங்குவதால் அவர்களின் சம்பளம் மற்றும் தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சுக்கு தலையிடுவதற்கான அதிகாரங்கள் குறைவாகும். தொழில் சட்டத்தின் கீழ் அந்த விடயம் இருப்பதால் தொழில் திணைக்களத்தின் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கான கௌரவம் வழங்கும் வகையில் அரச தகவல் திணைக்கள பணிப்பாளரால் சகல ஊடக நிறுவனங்களுக்கும் முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களுக்கு முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கமைய எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்காக பட்டய நிறுவனத்தை தொடர்பான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அது கூடிய விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும். ஊடகவியலாளர்களை தொழில்சார் உரிமைகளுடன் கௌரவமாக பணியாற்றக்கூடிய வகையில் பொருத்தமான நிறுவனத்தை அமைக்கும் வகையில் இது அமையும்.

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள்,பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

ala

கடல் அலைகள் நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம்!

August 26, 2026

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வௌியிடப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு

bima

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் அச்சமின்றி நாடு திரும்பலாம்

August 26, 2026

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்

hars

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி உண்மையை கண்டறியும் செயற்பாடுகளை ஒருபோதும் அரசாங்கம் நிறுத்தாது – அமைச்சர் ஹர்ஷன

August 26, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை வடக்குக்கு மட்டுமல்ல, தெற்கில் இருப்பவர்களுக்கும் பிரச்சினையாகக் காணப்படுகிறது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

ford12

அமெரிக்காவிற்கான மின்சார விநியோகத்தை நிறுத்துவதில் ஒன்டாரியோ தன்னிச்சையாகச் செயல்படாது: ஃபோர்ட்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போருக்கு ஒன்டாரியோ அளிக்கும் பதிலடியில் “எல்லா வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன” (everything’s on

hur

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட கண்ணிவெடிகள்!

August 26, 2026

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக

socfd

புகையிரத ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை

August 26, 2026

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுத்தல்

doug-ford-ontario-premiere-february-7-2023

டிரம்ப் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் ‘உலகம் முழுவதும் எதிரொலித்தன’: ஃபோர்ட்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இந்த வார தொடக்கத்தில் தான் நடத்திய தனிப்பட்ட விமர்சனங்களில் எல்லை மீறிச் சென்றுவிட்டதாகத்

canada export

எங்கள் கைகளில் பல வாய்ப்புகள் உள்ளன’: ஜோலி

August 26, 2026

அமெரிக்காவைக் கையாள்வதற்கு கனடாவிடம் இன்னும் பல வழிமுறைகள்/வாய்ப்புகள் இருப்பதாகத் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) தெரிவித்துள்ளார்.

trump

கனடாவுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது’: டிரம்ப்

August 26, 2026

அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த சில நாட்களிலேயே, “கனடா இனிமேலும் இப்படிச் செய்ய முடியாது என்பதை அவர்களுக்குப்

DNC4U5DD3VAOPMURZP5EIMAUFM

நேபாளம் மற்றும் சீனாவில் திடீர் வெள்ளப்பெருக்கு: குறைந்தது 98 பேர் பலி; 24 கனடியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை

August 26, 2026

உடின் துங்கா, நேபாளம் — நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது

vaiko-0-15505761891-1774239191

“அரசாங்கத்தை முடக்கிப் போடச் சில ஊழல் அதிகாரிகள் நினைக்கிறார்கள்!” – வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

August 26, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரசு நிர்வாகத்தில்

Shahjahan

“சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரம் அளித்த த.வெ.க. அரசு!” – மிலாதுன் நபி விழாவில் அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி உரை

August 26, 2026

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம்