பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை(23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 30, 988 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 748 கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும், பிடியாணை உத்தரவுக்கமைய கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 613ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேநேரம், திறந்த பிடியாணை உத்தரவுக்கமைய 348பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 29 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து குற்றங்களுக்காக 4335 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.