தொடரும் போர் பதற்றங்கள்; விமானக் கட்டணங்கள் இருமடங்காக உயரும்!

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் ஜெட் எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், விமான கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு கலன் ஜெட் எரிபொருளின் விலை 2.25 டொலரிலிருந்து சுமார் 4 டொலராக உயர்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி, இலங்கையிடம் 28 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு காணப்பட்டது. தற்போது சுமார் 21 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஒரு எரிபொருள் கப்பல் வரவுள்ளது. அத்துடன் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் மற்றுமொரு கப்பல் வரவுள்ளதால், விநியோகத் தடைகள் ஏற்படாது என பிரதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் விலை உயர்வு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பதில் தலைமை நிர்வாக அதிகாரி வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பழைய விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளதால், அந்தப் பயணிகளிடம் மேலதிக கட்டணத்தை வசூலிக்க முடியாது. இது நிறுவனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இழப்புகளை ஈடுகட்ட உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக அந்தப் பகுதிகளுக்கான விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுக்கான பயணிகளின் வருகை சீராக உள்ளது.

வருவாயைப் பெருக்குவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கான மேலதிக விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.

சர்வதேச எரிபொருள் நெருக்கடி காணப்பட்ட போதிலும், இலங்கையின் கடல்சார் துறை மற்றும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கப்பல்களின் வருகை அட்டவணையில் இதுவரை மாற்றங்கள் ஏற்படவில்லை என பிரதி அமைச்சர் கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Mani

‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்திள் ‘தங்கரத்தினமே..’ வெளியீடு!

March 22, 2026

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற

kal

பரத் – அஜய் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘காளிதாஸ் 2’படத்தின் முன்னோட்டம் வெளியீடு

March 22, 2026

சந்தை மதிப்புள்ள நடிகர் பரத் மற்றும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி ஆகியோர் இணைந்து முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘காளிதாஸ்

muth

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவாவின் முதல் முதலாய்’ பாடல்

March 22, 2026

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ எனும் பெயரில் வெளியான சுயாதீன இசை அல்ப பாடலில்

Nalinda

இலங்கைக்கு மார்ச் 25 இல் 37இ000 மெற்றிக் தொன் டீசல் கப்பல் வருகிறது!

March 22, 2026

சுமார் 37,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார

sanj

இலங்கையில் சட்டம் என்பது விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது!

March 22, 2026

இலங்கையில் சட்டம் என்பது தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள்

Epst

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாண எப்ஸ்டீன் மாளிகையில் விசாரணை

March 22, 2026

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஜெப்ரி எப்ஸ்டீனின் மாளிகையில் நடைபெற்று வரும் விரிவான தேடுதல் வேட்டை, சர்வதேச அளவில்

iraa

ஒரே நாளில் ஈரானின் 17 மாகாணங்கள் மீது 640 தாக்குதல்கள்

March 22, 2026

ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித

1688202098-EARTHQUAKE-6

இந்தியாவில் நில நடுக்கம்

March 22, 2026

இந்தியாவின் சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று(21.03.2026) இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.46 மணியளவில் மெக்னிடியூட்

jeya

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

March 22, 2026

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு விடவும், வாக்கெடுப்பு நடத்தவும் சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது

arrest

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் இயந்திரங்களை இறக்குமதி செய்த வர்த்தகர் கைது

March 22, 2026

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் இயந்திரங்களை இறக்குமதி செய்து, அவற்றை இலங்கையில் ஒன்றிணைத்து விற்பனை செய்து வந்த

jap

உயர்மட்ட பாதுகாப்பு பேச்சு

March 22, 2026

இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோருக்கிடையிலான

flight

தொடரும் போர் பதற்றங்கள்; விமானக் கட்டணங்கள் இருமடங்காக உயரும்!

March 22, 2026

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் ஜெட் எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், விமான கட்டணங்கள்