தேனிசை செல்லப்பா மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்

தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த தேனிசை செல்லப்பா, தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் “பாசறைப் பாணர்” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

தேனிசை செல்லப்பா மறைவையொட்டி பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல ஈழ விடுதலைப் போராட்டப் பாடகர் தேனிசை செல்லப்பா இன்று (ஏப்.28) காலமானார். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வகையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி, “பாசறைப் பாணர்” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர், தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

இவரது மறைவையொட்டி பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வைகோ இரங்கல்

ம.தி.மு.க தலைவர் வைகோ, தனது இரங்கல் குறிப்பில், தமிழீழ விடுதலைக்காகவும், தமிழின மறுமலர்ச்சிக்காவும் வாழ்நாள் முழுவதும் இசைக் குயிலாய் இன்னிசை பாடல்களை இசைத்து வந்த தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று இயற்கையில் இணைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.

தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த தேனிசை செல்லப்பாவின் குரல் உலகம் முழுவதும் இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. இளம் வயதில் தூத்துக்குடியில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களைச் சந்தித்து, அவரது நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு நாடகங்களில் நடித்தும், பாடல்களைப் பாடியும் வந்தார்.

தந்தை பெரியார் அவர்கள் மன்னார்குடியில் நடத்திய தேசப் பட எரிப்பு போராட்ட விளக்க மாநாட்டில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல், அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவரான சி.பா.ஆதித்தனாரை பெரிதும் கவர்ந்தது. அவரின் விருப்பப்படி நாம் தமிழர் இயக்க மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் தன்மானப் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி வந்தார்.

தமிழீழ விடுதலைக்காக களமாடிய பேபி சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால் சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் தலைவர் பிரபாகரன் அவர்களோடு தேனிசை செல்லப்பா அறிமுகமானார். அது முதல் தமிழீழ விடுதலைக்காக தன் எழுச்சிக் குரலால் பாடல் இசைத்து, தமிழ் உணர்வை விதைத்து வந்தார். 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோட்டை மைதானத்தில் ஐந்து இலட்சம் தமிழர்கள் திரண்ட கூட்டத்தில் தேனிசை செல்லப்பாவின் ஈழ விடுதலைப் பாடல்கள் புத்தெழுச்சியை ஊட்டியது.

இலண்டன் மாநகரில் அவருக்கு விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டு, அங்கிருந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் தேனிசை செல்லப்பா அவர்கள் ஊண் உருகப் பாடியபோது, கூடியிருந்த மக்களும் கண்ணீர் சிந்தி தங்கள் துயரத்தை வெளிப்படுத்திய காட்சி காணொலியாய் உலகம் முழுவதும் வலம் வந்தது. வீரத்தின் வேர்கள், தாய் நிலத்து வேலி முதலான பல்வேறு தலைப்புக்களில் ஈழ விடுதலைக்காக பாடிய இவரை, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பாசறை பாணர் என்று பாராட்டினார்.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் இலக்கிய அணி நடத்திய பாவேந்தர் விழாக்களிலும், கழகத்தின் கூட்டங்களிலும் தேனிசை செல்லப்பா அவர்கள் பலமுறை பாடி மகிழ்வித்திருக்கிறார். வெளி ஊர்களுக்கு காரில் பயணம் செய்கிறபோது, இரவு, பகல் என எந்த வேளையிலும் அவரது உயித் துடிப்பான பாடல்களைக் கேட்டு மகிழ்வது என் வழக்கம். என் மீதும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், மதிப்பும் கொண்டிருந்த தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவு தமிழின உணர்வுள்ள அனைவருக்கும் பேரிழப்பாகும்.

தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவால் துயரத்தில் உள்ள அவரது மனைவி திருமதி விஜயா, அன்பு மகன் இளங்கோவன், ஆருயிர் புதல்விகள் தமிழ்க்கொடி, ராஜேஸ்வரி ஆகியோருக்கும், தமிழ் மக்களுக்கும், ஈழத்தமிழ் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேனிசை செல்லப்பா அவர்கள் தனது உணர்ச்சிமிகு பாடல்களால் எந்நாளும் நம்மோடு வாழ்வார்!” என்று கூறியுள்ளார்.

retd-judge-kirubakaran-2026-04-28-17-07-51

“என் கட்சி தோற்றால் த*ற்கொ*லை செய்வேன் என்பதா?” – சமூக வலைதளப் பதிவுகளால் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் கடும் வேதனை!

April 29, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சில கட்சியினர் பதிவிடும் கருத்துக்கள்

768-512-19605272-thumbnail-16x9-tamili

“4-ம் தேதி வரை தவெகவினர் கனவு காணட்டும்” – செங்கோட்டையன் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பதிலடி!

April 29, 2026

திண்டுக்கல்: “தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறிய

1c7086d0-00b2-11ef-8fbb-975a5f7e9af9.png

கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் இன்று மதுரை புறப்படுகிறார் அழகர்!

April 29, 2026

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமான கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளும் வைபவம் இன்று தொடங்குகிறது. சைவ,

puthiyathalaimurai_2026-04-24_g3n952sd_se-4

தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளின் தலைவிதியைத் தீர்மானிக்க 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை!

April 29, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம்

namal

இது சைபர் தாக்குதல் அல்ல, போலி ஆவணங்கள் மூலம் நடந்த மோசடி” – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

April 29, 2026

ஏப்ரல் 29, 2026 அரசாங்கக் கணக்குடன் தொடர்புடைய அண்மைக்கால நிதி மோசடியானது, உண்மையான சைபர் தாக்குதல் (Cyber attack) மூலம்

humanright comm

வடகிழக்கு பெண் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர் – மனித உரிமை ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

April 29, 2026

ஏப்ரல் 29, 2026 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் (HR defenders)

683656357_122289662186194641_742273206620209422_n

டேட்டிங் ஆப் மூலம் சந்திப்பு: ஆயுத முனையில் கொள்ளையடித்த நபரைத் தேடும் கால்கரி பொலிஸார்

April 29, 2026

ஆயுத முனையில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரைக் கண்டறிய கால்கரி (Calgary) பொலிஸார் பொதுமக்களின் உதவியைக்

f 35

88 எஃப்-35 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை கனடா மீள்பரிசீலனை செய்கிறது

April 29, 2026

88 எஃப்-35 (F-35) போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை கனடா தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து வருவதாகவும், இதற்கு மாற்றாக

684148000_122289679532194641_663390058442866895_n

லம்ப்டன் கல்லூரி மதுபான விடுதி துப்பாக்கிச் சூடு: கொலைச் சந்தேகநபர் கைது

April 29, 2026

லம்ப்டன் கல்லூரிக்கு (Lambton College) அருகிலுள்ள வளாக மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு

canada police251

பிக்கரிங் வணிக வளாகத்தில் திருட்டு மற்றும் கத்தியால் மிரட்டிய பிராம்ப்டன் இளைஞர் கைது

April 29, 2026

பிக்கரிங் (Pickering) பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக பிராம்ப்டனைச் சேர்ந்த 28 வயது

carney

வசந்த கால பொருளாதார அறிவிப்பில் ‘நல்ல செய்திகள்’ வரும்: மார்க் கார்னி உறுதி

April 29, 2026

கனடா அரசாங்கம் தனது வசந்த கால பொருளாதார அறிக்கையை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், நாட்டின் நிதி நிலைமை குறித்து

679747034_122289804662194641_1967856837116012061_n

கோபர்க் நெடுஞ்சாலை 401 விபத்தில் ஒன்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரி பலி

April 29, 2026

கோபர்க் (Cobourg) பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401-இல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரி