தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் 1 200 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட, ரூ. 1,200 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 650 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகின் உரிமையாளரான பெண்ணும், அவரது மகனும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பகுதியில் பதுங்கியிருந்த போதே இவ்விருவரும் கடந்த 16-ம் திகதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட படகின் மாலுமி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தொகுதியை கடத்துவதற்காக படகு மாலுமிக்கு மட்டும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பாரிய கடத்தலின் பின்னணியில் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘அங்கோட பிரியங்கர’ மற்றும் ‘தினூக’ ஆகியோரே செயற்பட்டுள்ளனர். கடத்தல் பணிகளை ‘பரேவி சுதா’ என்பவர் ஒருங்கிணைத்துள்ளார்.

விசாரணைகளின்படி, அங்கொட பிரியங்கரவுக்கு சொந்தமான 1,000 கிலோ கிராம் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை ‘பரேவி சுதா’ பொறுப்பேற்றிருந்தார். இதில் முதற்கட்டமாக 320 கிலோ கிராம் போதைப்பொருள் சில மாதங்களுக்கு முன்பு மிரிஸ்ஸ கடற்கரையில் வைத்து கைப்பற்றப்பட்டது.

இந்த சுற்றிவளைப்புக்கு ஒற்றுக் கொடுத்தவரின் தலையைத் துண்டித்து, பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கே அனுப்ப அங்கொட பிரியங்கர திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. எனினும், அந்தப் பணியை ஏகப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதால் அந்தச் சதி முறியடிக்கப்பட்டது.

பேருவளை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட 250 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி ரூ. 1,200 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ‘தினூக’ என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.ஒரு கிலோ கிராம் கொக்கெய்ன் சுமார் 4.5 கோடி ரூபாய் பெறுமதியானது.

இலங்கையிலுள்ள சில செல்வந்தர்களே இந்த கொக்கெய்ன் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் தென் அமெரிக்க நாடொன்றிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலுக்குத் துணைபோகும் படகு உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

vasa

சவாலான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்

March 18, 2026

நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன்

st

இரு அரச பேருந்துகள் மோதியதி விபத்து; நால்வர் பலி – 40 பேர் படுகாயம்

March 18, 2026

அம்பலந்தொட்ட – கதிர்காம பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக

muni

மறு அறிவிப்பு வரும் வரை உடன் நடைமுறைக்கு வரும் திட்டம்

March 18, 2026

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.

e

இலங்கை தொழில் திணைக்களத்தின் சேவை மாற்றம்

March 18, 2026

இலங்கை தொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஊழியர் சேமலாப நிதி பிரிவின் சேவை மாற்றம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

no

வடகொரிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவு

March 18, 2026

957ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வடகொரிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளதை அந்நாட்டு அரசு ஊடகங்கள்

ddd

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு

March 18, 2026

இலங்கையின் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்ட மாற்றங்களை 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தயாராக

sene

சம்பியனாக மொராக்கோ

March 18, 2026

தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக மொராக்கோ பிரகடனப்படுத்தப்பட்டதுடன், செனகலின் பட்டமானது தொடரின் இறுதிப் போட்டி தொடர்பான மேன்முறையீட்டையடுத்து ஆபிரிக்க

drug

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் 1 200 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!

March 18, 2026

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட, ரூ. 1,200 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 650 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்தலுக்குப்

wre

அமெரிக்காவினல் அமைச்சராக மல்யுத்த வீரர்

March 18, 2026

அமெரிக்காவின் மிக முக்கிய துறையான உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கிறிஸ்டி நோம், நிர்வாக சிக்கல்கள் மற்றும் சமூக வலைதள

rain

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழை

March 18, 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை

child ab

12 வயது சிறுமி வன்புணர்வு: சிப்பாயும் மனைவியும் கைது

March 18, 2026

12 வயதுடைய சிறுமி ஒருவரை, அவர் 10 வயதாக இருக்கும் காலம் முதல் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியான பாலியல்

Cabinet de

பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்கள்

March 18, 2026

பொருளாதார நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும்