தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை மீறுகின்றது!

 

‘2021 தேர்தல் வாக்குறுதிப்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது’ என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரையில் சங்க மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் 2500 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். 2021 தேர்தல் அறிக்கையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கு மேல் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியது.

ஆனால் தற்போது டிச., 9 ல் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்க மாநில தலைவர் ஜெயந்திக்கு திட்ட இயக்குனர் சீதாலட்சுமி அனுப்பிய கடிதத்தில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை பரிசீலித்தோம்.

அதன்படி மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் நுாறு சதவீதம் மத்திய அரசு நிதிஉதவியுடன் செயல்பட்டு வருவதால், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்கோ, முறைப்படுத்துவதற்கோ அல்லது தொடர்வதற்கோ எந்த ஏற்பாடும் இல்லை.

அரசு ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய வேறு எந்த பயன்களும், சலுகைகளும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படாது எனத்தெரிவித்துள்ளனர். மணிப்பூர், ராஜஸ்தான், ஒரிசா மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்துள்ளனர்.

ஆளும் தி.மு.க, அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என மாநில திட்ட இயக்குநர் அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவது உட்பட அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., அளித்த அனைத்து வாக்குறுதிகளும் இதே நிலைதானா என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றினால் 2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது