தலைவர் 173 படத்தை இயக்கப்போவது யார்?

சுந்தர் சி தலைவர் 173 படத்தை தான் இயக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து தலைவர் 173 படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்கள் விவாதித்து கொண்டு இருக்கின்றனர். இரு இயக்குனர்களின் பெயர்கள் தான் தலைவர் 173 படத்திற்காக அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சுந்தர் சி இணைகின்றனர் என கடந்த ஒரு சில மாதங்களாக சொல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் இதை அதிகாரபூர்வமாகவே அறிவித்தனர். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தலைவர் 173 திரைப்படத்தை தயாரிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் இந்த தகவலை கேள்விப்பட்டு உற்சாகமடைந்தனர். 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்ற அளவுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். ஏன் ? என்னாச்சு ? என்பது தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர் சி இப்படத்திலிருந்து வெளியேறிய நிலையில் அடுத்ததாக தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என ரசிகர்கள் தீவிரமாக பேசி வருகின்றனர்.

பெரும்பாலானோர் இந்த இரண்டு இயக்குனர்களுக்கு தான் தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகின்றது. அதில் ஒரு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை வைத்து ஏற்கனவே பேட்ட என்ற திரைப்படத்தை கொடுத்தவர் தான் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி ரசிகர்களை கவர்ந்த பேட்ட திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தலைவரை வைத்து படம் இயக்க கடந்த ஒரு சில ஆண்டுகளாக தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் முயற்சித்து வருகிறாராம்.

தற்போது சுந்தர் சி தலைவர் 173 படத்திலிருந்து விலக அந்த வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜிற்கு கிடைக்கலாம் என பலர் சொல்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் கலகலப்பான ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கவே விரும்பியிருக்கிறார். அதன் காரணமாக தான் சுந்தர் சியை அவர் தேர்ந்தெடுத்தார். கார்த்திக் சுப்புராஜ் படங்களில் காமெடி இருந்தாலும் அவரின் படங்கள் வித்யாசமான ஜானர்களில் தான் இருக்கும். எனவே ரஜினி கேட்பதை போல கலகலப்பான கமர்ஷியல் படத்தை வெங்கட் பிரபுவால் கொடுக்க முடியும்.

ஏற்கனவே வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து கதை பற்றி பேசியிருக்கிறார். எனவே வெங்கட் பிரபு தலைவர் 173 படத்தை இயக்கவும் வாய்ப்பிருப்பதாக சிலர் சொல்கின்றனர். ரஜினிகாந்த் -வெங்கட் பிரபு என்ற வித்யாசமான காம்போ இணைந்தால் கண்டிப்பாக அப்படம் ஜாலியான அதே சமயத்தில் வித்யாசமான படமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகின்றது. மேலும் இப்படம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்தவுடன் துவங்கி விறுவிறுப்பாக குறுகிய காலகட்டத்திற்குள் எடுக்கப்படும் படமாக இருக்குமாம்.

அதே சமயம் கலகலப்பான கமர்ஷியல் படமாகவும் இருக்க வேண்டுமாம். இந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஏற்ற இயக்குனர் ஒருவரை ரஜினியும் கமலும் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். ஒருபக்கம் அறிவிப்பு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் திடீரென சுந்தர் சி இப்படத்தை விட்டு விலகுவதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. மறுபக்கம் சுந்தர் சிக்கு பதிலாக இப்படத்தை இயக்கப்போவது யார் ? என்பதும் தெரியவில்லை.

இவ்வாறு தலைவர் 173 பற்றிய குழப்பங்கள் நீடித்துக்கொண்டே வருகின்றது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுந்தர் சிக்கு மாற்றாக ஒரு இயக்குனரை கமலும் ரஜினியும் தேர்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சுந்தர் சி தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குக்கொண்டு வருகின்றார். அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என தெரிகின்றது.

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்