தரவுப் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 மார்ச் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதிலும், இலங்கையில் தனியுரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் இந்த நியமனம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதற்கு முன்னர் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளராகப் பணியாற்றிய அத்தபத்து, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
கொழும்பு மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகங்களில் கணினி அறிவியல் மற்றும் தகவல் அமைப்புகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் துறையிலும் விரிவான அனுபவத்தைக் கொண்டவர். இவரது தலைமையின் கீழ், பாதுகாப்பான தரவு ஆளுகைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையில் டிஜிட்டல் நம்பிக்கையை மேம்படுத்த அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமும் கட்டம் கட்டமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.