தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்றே கூறவேண்டும் – முபாற‌க் முப்தி

மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கிறார்கள் என ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேச்சாள‌ர் மாநாடு நேற்று(17.02.2026) சாய்ந்த‌ம‌ருது க‌லாசார‌ ம‌ண்ட‌ப‌த்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2017 ஆண்டு மாகாண சபை தேர்தல் நடைபெற கூடாது என்பது தொடர்பில் சதி செய்யப்பட்டது. குறிப்பிட்ட சிலரின் சதி திட்டங்களின் பிரதி பலனை தான் இந் நாடு தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது. அப்போது சிலர் மாகாண சபையை ஒழிப்பதற்கான சதி என்று கூறினார்கள்.

தற்போது கூட அந்த மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குரிய சட்டப்பிரச்சினை இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவே உணர்கின்றோம். மாகாண திருத்த சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்த ரணில் மற்றும் ஹக்கீமும் றிசாட்டும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அத்துடன், பகிரங்கமாகவே சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட நிசாம் காரியப்பரும் மாகாண சபையை ஒழிப்பதற்கு எமது கட்சியும் ஒரு காரணம் தான் என ஏற்றுக்கொண்டிருந்தார். இவற்றை பார்க்கும் பொழுது வேண்டுமென்றே இந்த தேர்தலை நடத்த விடவில்லை என்பது எண்ணத் தோன்றுகின்றது.

இதை விட ஆட்சியில் இருக்கும் சட்டத்தரணிகளுக்கு கூட இந்த சட்டங்கள் தெரியவில்லையா? என்பதை நாங்கள் கேள்வியாக கேட்க விரும்புகின்றோம். எங்களை பொறுத்தவரை மாகாண சபை தேர்தல் சரியான முறைப்படி நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தான் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

ஆனால் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இன்று ஒப்பாரி வைக்கின்றது.

இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது. உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்றே கூறவேண்டும்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள். சிங்கள அரசாங்கத்தின் தேர்தல் முறையினை ஏற்றுக்கொள்கின்றார்கள்.

அரசாங்கத்திற்கு சில அழுத்தங்களை வேண்டும் என கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள் என்பது தான் உண்மையாகும். எனவே, தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேராள‌ர் மாநாடு க‌ட்சியின் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க் த‌லைமையில் ந‌டை பெற்ற‌ இந்த மாநாட்டில் க‌ட்சியின் நிர்வாக‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

பாகிஸ்தானியர்களுக்கான விசா கட்டுப்பாட்டை தளர்த்த பணிப்பு

பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருமான மோசின் நக்வி உடனான சந்திப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தானை அனைத்து “எதிர்மறை” விசா பட்டியல்களிலிருந்தும் உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரஜைகளுக்கான பயண வசதிகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் போது, பாகிஸ்தானியர்கள் இலங்கை விசாவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நக்வி சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தானை கட்டுப்பாடுகள் உள்ள விசா பிரிவுகளிலிருந்து நீக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த முடிவு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பயணிகளுக்குப் பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி மற்றும் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கான அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சவாலான காலப்பகுதிகளில் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

மேலும், இலங்கைப் பிரதமர் விரைவில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் அவர் அறிவித்தார்.

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

put

புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

April 30, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத்

RBKOMUGNEVG3ZHUJGP6GE3XTP4

டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்!

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம்

684105632_993797889662066_5036282836550723148_n

யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

April 30, 2026

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல்

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்