தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச்சுவார்த்தை

மிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.

இருப்பினும் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதனையடுத்து கடந்த 18 ஆம் திகதி தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்து செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்’ என அதில் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் எந்தவொரு விடயத்திலும் இரகசியத்தன்மை பேணப்படவேண்டிய அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே தமிழ்த்தேசியப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டு நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையிடம் அறிவித்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருவதாக அறியமுடிகிறது.

TRUMP OVAL

விட்காஃப் மற்றும் குஷ்னரின் இஸ்லாமாபாத் பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்தார் –

April 25, 2026

தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) இனி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லமாட்டார்கள் என்று

thyity

தையிட்டியில்_சட்டவிரோத திஸ்ஸவிகாரைக்காக நில அபகரிப்பு முயற்சி? அரசாங்க அதிபருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசர கடிதம்!

April 25, 2026

தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள மக்களின் காணிகளை ‘காணி உரித்து

5K2OIUJ5TZHGBPE23E4PGQTOUI

உலகப் புகைப்படக் கிண்ணத்தில் கனடாவுக்குத் தங்கம்:

April 25, 2026

ஐஸ்லாந்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான உலகப் புகைப்படக் கிண்ணப் போட்டியில், வனவிலங்குப் பிரிவில் (Wildlife category) மிச்செல் வால்பெர்க் தங்கப்

2ZECXWEPX5EXFBJ4EFHSLCBJD4

சீக்கிய முதியவர் மீது இனவெறித் தாக்குதல்: வுட்ஸ்டாக் இளைஞர் மீது வழக்குப்பதிவு

April 25, 2026

கனடாவின் ஒண்டாரியோ மாகாணம், வுட்ஸ்டாக் பகுதியில் முதியவர் ஒருவரைத் தள்ளிவிட்டு, இனவெறி கருத்துக்களைக் கூறி மிரட்டிய இளைஞர் ஒருவர் மீது

C2KBHBHB3JFXZPJT3JH462QNDA

பிராம்ப்டன் விபத்து: பாதசாரி ஒருவருக்கு கவலைக்கிடமான காயம்

April 25, 2026

பிராம்ப்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது

kasy

கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் – சுமந்திரன்

April 25, 2026

யாழ். நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு

canada police26

பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த பாதசாரி மீது மோதிய வாகனம்: பெண் ஒருவர் பலத்த காயம்

April 25, 2026

டொராண்டோவின் எட்டோபிகோக் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பேருந்து தரிப்பிடம் (Bus Shelter) ஒன்றிற்குள் வாகனம் புகுந்ததில் 53 வயது பெண்

6JMOXKLTHJCKLBVUSEY43I76XE

டொராண்டோ துப்பாக்கிச் சூடு: 30 வயது நபர் பலி; மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 25, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது

vima

வடக்கு மாகாண பேருந்து சேவை மீதான முறைப்பாடுகள் விரைவில் நிவர்த்திக்கப்படும்

April 25, 2026

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் (இ.போ.ச.) முன்னெடுக்கப்படும் சில பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்துப்

KJE3Q6LK5UYAXTBIES3VGNIG24

பர்னபி இளைஞன் கொலை வழக்கு: 4 கொள்ளையர்களில் இரண்டாவது நபருக்கு சிறைத்தண்டனை

April 25, 2026

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் (Burnaby) வசித்த 19 வயது இளைஞன் ரியான் நாகி

MEQXKJMDPG7FYCUATJCSGZDBQA

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு: பிலிப்பைன்ஸ் போர் பயிற்சியில் முதன்முறையாக கனடா பங்கேற்பு

April 25, 2026

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ஈடுபாட்டை அதிகரிக்கும் ஒரு “முக்கியமான நடவடிக்கையாக”, பிலிப்பைன்ஸில் நடைபெறும் ‘பாலிகாட்டன்’ (Balikatan) கூட்டுப் போர் பயிற்சியில்

it cyber jobs

திறைசேரி மீதான சைபர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் – நிபுணர் கருத்து

April 25, 2026

அண்மையில் திறைசேரியின் 2.5 மில்லியன் டாலர் நிதி திருடப்பட்ட சம்பவம், ‘பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்’ (Business Email Compromise –