சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிக்க முயன்றதை அடுத்து, காலி சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டால் பயந்துபோன கைதிகள் தப்பிக்கும் முயற்சியைக் கைவிட்டு சிறை வளாகத்திற்குத் திரும்பியதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
தப்பிக்க முயன்றபோது சிறைச்சாலை சுவரில் இருந்து விழுந்ததில் இரண்டு கைதிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.