தண்ணிமுறிப்பில் திட்டமிடலின்றிய வீதிச்சீரமைப்பால் பல்வேறு நெருக்கடிகள்?

முறையான திட்டமிடல் இன்றிய வீதிச்சீரமைப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்துநெருக்கடியால், வயல்காவலுக்குச் செல்லுதல் மற்றும் வயல்நிலங்களுக்கு விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாக முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு விவசாயிகள், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் முறைப்பாட்டையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று புதன்கிழமை (03) குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு நீர்ப்பாசனக்குளத்தின் கீழான சுமார் 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களுக்குச் செல்லும் பாதைகளில் முறையான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட வீதிச் சீரமைப்பு பணிகள் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன.

குறிப்பாக தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதி அபிவித்தித் திணைக்களத்திற்குரிய வீதியில் முறையான திட்டமிடலின்றிய வகையிலும், பொருத்தமற்ற காலப்பகுதியிலும் பல பாலங்களை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த பாலங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை.

அதேபோல் தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்குச்செல்லும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய வீதியிலும் முறையான திட்டமிடலின்றி, பொருத்தமற்ற காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாலம் அமைக்கும் வேலைத்திட்டமும் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது. இவ்வாறாக அவ்வீதியில் பொருத்தமற்ற காலத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை வெள்ள நீரிலிருந்து பாதுகாப்பதற்காக வீதி வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களால் இதன்போது முறையிடப்பட்டது.

இத்தகைய சூழலில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அவ்வீதிகள் பாரிய அளவில் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

இதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். குறிப்பாக வயல் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதுடன், வயலுக்கான உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும் விவசாயிகள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரடியாக அவதானித்ததுடன், இதுதொடர்பில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து நிலமைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியதுடன், விவசாயிகளின் போக்குவரத்து இடர்பாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு வயல்நிலங்களுக்குச் செல்லும் வீதிப்போக்குவரத்தை தற்காலிகமாக சீர்செய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான