தண்ணிமுறிப்பில் திட்டமிடலின்றிய வீதிச்சீரமைப்பால் பல்வேறு நெருக்கடிகள்?

முறையான திட்டமிடல் இன்றிய வீதிச்சீரமைப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்துநெருக்கடியால், வயல்காவலுக்குச் செல்லுதல் மற்றும் வயல்நிலங்களுக்கு விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாக முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு விவசாயிகள், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் முறைப்பாட்டையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று புதன்கிழமை (03) குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு நீர்ப்பாசனக்குளத்தின் கீழான சுமார் 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களுக்குச் செல்லும் பாதைகளில் முறையான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட வீதிச் சீரமைப்பு பணிகள் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன.

குறிப்பாக தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதி அபிவித்தித் திணைக்களத்திற்குரிய வீதியில் முறையான திட்டமிடலின்றிய வகையிலும், பொருத்தமற்ற காலப்பகுதியிலும் பல பாலங்களை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த பாலங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை.

அதேபோல் தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்குச்செல்லும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய வீதியிலும் முறையான திட்டமிடலின்றி, பொருத்தமற்ற காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாலம் அமைக்கும் வேலைத்திட்டமும் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது. இவ்வாறாக அவ்வீதியில் பொருத்தமற்ற காலத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை வெள்ள நீரிலிருந்து பாதுகாப்பதற்காக வீதி வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களால் இதன்போது முறையிடப்பட்டது.

இத்தகைய சூழலில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அவ்வீதிகள் பாரிய அளவில் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

இதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். குறிப்பாக வயல் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதுடன், வயலுக்கான உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும் விவசாயிகள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரடியாக அவதானித்ததுடன், இதுதொடர்பில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து நிலமைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியதுடன், விவசாயிகளின் போக்குவரத்து இடர்பாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு வயல்நிலங்களுக்குச் செல்லும் வீதிப்போக்குவரத்தை தற்காலிகமாக சீர்செய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Poli

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

March 7, 2026

இலங்கைக் கடற்படையினர் நாட்டின் தெற்கு திசையிலுள்ள ஆழ்கடலில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை

ceb

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எரிசக்தி அமைச்சு

March 7, 2026

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு

44

மாவடிப்பள்ளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

March 7, 2026

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று

in

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இலங்கை – இந்தியா இணக்கப்பாடு!

March 7, 2026

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.

coo

சமூக வலைத்தள விற்பனை முகவர்களால் ஏமாற்றப்பட்ட யாழ். இளைஞர்

March 7, 2026

சமூக வலைத்தளங்கள் ஊடாக “காஸ் குக்கர்” விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

urum

உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

March 7, 2026

யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்ததானது சற்றமுன்னர்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள்

mug

டிட்வா’ சூறாவளியால் அனர்த்த முகாம்களில் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!

March 7, 2026

`Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட

aswe

அஸ்வெசும திட்டம் – வீட்டிற்கு வரப்போகும் அரச அதிகாரிகள்

March 7, 2026

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப்

jap

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் கென்ய பிரதம அமைச்சரவைச் செயலாளர் இடையில் முக்கிய சந்திப்பு!

March 7, 2026

இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர்

hon

வல்வெட்டித்துறையில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!

March 7, 2026

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால்

fffff

மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

March 7, 2026

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள்

jaf un

ஊடக கற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்

March 7, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்