தடுப்புக்காவலில் போதைப்பொருள் கடத்தல்காரர் பொடி லெசி!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (27) பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ரத்கம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மெண்டிஸின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘பொடி லெசி’ முதன் முதலில் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் மனிதக் கொலைகள், துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பூசா சிறைச்சாலையில் இருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்றுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக இவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 2024 டிசம்பர் மாதம் வரை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவர் சிறையிலேயே இருந்தார்.

பின்னர், 2024 டிசம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான அவர், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளைச் செலுத்திவிட்டு வெளியேறினார்.

நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பிணை நிபந்தனைகளை மீறி அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு சட்ட உதவி வழங்குவதற்காக இலங்கையிலிருந்து இரு சட்டத்தரணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தனர்.

இந்திய பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக நேற்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் இந்தியா சென்றிருந்ததுடன், அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

தமிழக-மக்கள்-கழகம்

விஜய்க்கு எதிராக நடிகர் அஜித் அரசியலா? “தமிழக மக்கள் கழகம்” – கள்ளக்குறிச்சியில் ரசிகர்கள் புதிய கட்சி தொடக்கம்!

September 20, 2026

கள்ளக்குறிச்சி: திரைப்படங்களிலும் கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழக மக்கள்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

RAJMOHAN3

“மு.க.ஸ்டாலின் பட்டிமன்றப் பேச்சாளரைப் போல் எதுகை மோனையில் பேசுகிறார்!” – அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்

September 20, 2026

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளை விளக்கியதுடன்,

tn-che-08-vinayagar-script-photo-7204807_20092026210403_2009f_1789918443_215

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் அடுத்தடுத்து மோதல் மற்றும் சலசலப்பு!

September 20, 2026

சென்னை: பலத்த காவல் துறை பாதுகாப்புக்கு மத்தியில், சென்னையில் இன்று நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டினப்பாக்கம்

images (12)

“அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்குவால் அல்ல; உண்ணிக் காய்ச்சலால்!” – சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவரின் உயிரிழப்பு

HH9G3vpboAECv_k

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை!” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நாளை அவசர ஆலோசனை!

September 20, 2026

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையிலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நாளை முதல் 21 மாவட்டங்களில்

1200-675-27675426-thumbnail-16x9-protestannouncement

“பிற மாநிலங்களுக்கு இணையான ஊதியம் தேவை!” – அக்டோபர் 5-ல் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், தங்களுக்குப் பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வு மற்றும் பணிப்பெயர் மாற்றம்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

1200-675-26075167-thumbnail-16x9-ctrnirmal

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது!” – அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

September 20, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார்,

tamil-nadu-govt-employees

5 மாதங்களில் ரூ. 30,021 கோடி நிதிப் பற்றாக்குறை: தவெக அரசின் வரவு – செலவு கணக்கு வெளியீடு!

September 20, 2026

சென்னை: 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தமிழ்நாடு அரசின் தற்காலிக நிதிநிலை அறிக்கையை

sivajisanthi

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்

September 20, 2026

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்