தலவாக்கலை லோகி தோட்டத்தில் இருந்து தேயிலை கொழுந்து ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை லோகி தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் வைத்து திங்கட்கிழமை (02) மாலை விபத்துக்குள்ளானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
லோகி தோட்டத்திலிருந்து பெயாவல் தேயிலை தொழிற்சாலை நோக்கி சென்றுக் கொண்டிருந்த டிராக்டர் வாகணத்தின் டெய்லர்( பெட்டி) கழன்ற நிலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது டெய்லரில் (பெட்டியில்) பயணித்த தொழிலாளி ஒருவர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.