டிக்கோயா பிணவறைச் சம்பவம்: ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட வேண்டும் – ஜீவன் தொண்டமான்

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஆகியோர் தலையிட்டு முறையான சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (08) டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைதிவழிக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், பொலிஸாரினால் நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்குச் சென்று, பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

“எமது சமூகத்தில் தவறு நடக்கும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தால், அதனைச் சிலர் அரசியல் செயற்பாடு எனச் சித்தரிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இது அரசியல் சார்ந்த அல்லது தேர்தல் தொடர்பான விவகாரம் அல்ல. ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. இது குறித்து அரசாங்கத்திடமிருந்து ஒரு தெளிவான பதிலை எதிர்பார்க்கின்றோம்.

சம்பவம் நடந்த இரவு வேளையில் பிணவறைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் மூன்று ஊழியர்களையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை இடமாற்றம் செய்துவிட்டு விசாரணை நடத்துவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. இவ்வாறானதொரு சம்பவம் நாட்டின் வேறு ஒரு பகுதியில் இடம்பெற்றிருந்தால், அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பது ஜனாதிபதி அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நாங்கள் இன்று பாரிய போராட்டத்தை நடத்த முற்படவில்லை, அமைதியான முறையிலான ஒரு கவனயீர்ப்பையே முன்னெடுக்கவிருந்தோம். இன்று ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகரைச் சந்தித்துப் பேசியுள்ளேன்.

இச்சம்பவம் குறித்து இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எமக்கு உறுதி வழங்கியுள்ளார்” என்றார்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம