டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கிறது – ஈ.பி.டி.பி

இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக் கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடகச் செயலாளர் ப.ஸ்ரீகாந்.

டக்ளஸ் தேவானந்தாவின் இலாவகமான அணுகுமுறையினால் உருவாக்கப்பட்ட தமிழ் குடியேற்றங்களே திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இன்றளவும் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதியில், கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஏற்படுத்திய சட்ட ரீதியான தடைகளை மீறி புத்த பெருமானின் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தியையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நாட்டிலே பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்ற சிங்கள பௌத்த மக்களுள் ஒரு பிரிவினர், மத்தியில் மேலாதிக்க சிந்தனைகளும், இனவாத மதவாத சித்தாந்தங்களும் நச்சு செடிகளாக இந்த நாட்டிலே புரையோடிப் போய் இருப்பது புதிய விடயமல்ல,

இதன்காரணமாகவே, 70 களிலும் 80 களிலும் எங்களின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, உட்பட்ட அன்றைய இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

அந்த துரதிஸ்டமான சூழல் இன்றும் இந்த நாட்டிலே இருக்கின்றது. இந்த நச்சு செடி அழிக்கப்பட முடியாத ஒன்றாக, இந்த நாட்டின் சாபக்கேடாக இந்த நாட்டிலே காணப்படுகின்றது.

இந்த யதார்த்தத்தினை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும், பேரினவாத சிந்தனைகளுடனும் மதவாதச் சித்தாந்தங்களுடனும் சமரசம் செய்து தங்களை வலுப்படுத்த முனைவார்கள். அல்லது எதிர் கட்சிகள் அதனை தமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் எனபதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு.

கடந்த காலங்ளில் நாம் ஆளுந் தரப்பாக இருந்த காலத்தில், யதார்த்தங்களை லாவகமாக கையாண்டமையினால், எமது தாயகப் பிரதேசங்களில் எமது மக்களின் இருப்பை சிதைக்கும் நோக்கோடும், எங்களுடைய தொன்மையை அழிக்கும் நோக்கோடும், எமது மக்களின் ஆதிக்கத்தினை குறைக்கும் நோக்கோடும் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு தி்ட்டங்களை தடுத்து நிறுத்த முடிந்திருந்தது.

பல உதாரணங்களை சொல்ல முடியும்.

குறிப்பாக, 1994 ஆம் ஆண்டு காலப் பகுதியில் திருகோணமலையில் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரச காணியில் குடியேற்றங்களை உருவாக்க ஒரு தரப்பு திட்டமிட்டதை அறிந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, லாவகமாக குறித்த இடத்தில் 13 தமிழ் குடியேற்றங்களை உருவாக்கினார். இந்தக் குடியேற்றங்களே திருமலையில் இன்றளவும் ஒரு தமிழ் நாடாளுமன்ற உருப்பினரையாவது பாதுகாத்தூள்ளது.

அதேபோன்று, திருகோணேஸ்ரம் ஆலயத்தின் தொன்மையை சீரழிக்கும் வகையிலான கட்டுமானங்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு, யாழ்ப்பாணத்தில் தனிநாயகம் அடிகளாரின் சிலை அமைத்தமை, நாவற்குழியில் குடியேற்றம் அமைத்தமை , கடலட்டை பண்ணைகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கியமை போன்ற விடயங்களை லாவகமாக கையாண்டிருந்தார்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில், இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்ட, விடயங்களை தமிழ் மக்களின் இருப்பு மற்றும் எதிர்காலம், பதுகாப்பு சார்ந்து சிந்தித்து லாவகமாக விடயங்களை கையாலக்கூடிய ஒருவர் இல்லை என்பதையே திருகோணமலை விவகாரம் வெளிப்படுத்தி இருக்கின்றது.

ஆகவே, இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சார்ந்து இவ்வாறான விடயங்களை கையாளுகின்றவர்கள் மிகவும் நிதானமாக கையாள வேண்டும். வெறுமனவே, உணர்ச்சிவயப்பட்டு உணர்வு ரீதியான தீர்மானங்கள் மேற்கொள்ப்படுமாயின் அது எமது மக்களின் தலைகளில் நாமே மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது என்பதை புரிந்து செயற்பட வேண்டும். இதனை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

By C.G.Prashanthan

lal

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க 3 விதமான திட்டங்கள் – அமைச்சர் கே.டீ. லால்காந்த

November 18, 2025

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பதற்காக உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி

dau

டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கிறது – ஈ.பி.டி.பி

November 18, 2025

இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக் கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு

prim

பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கம் – பிரதமர்

November 18, 2025

போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின்

jail

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

November 18, 2025

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம்

sa

வெற்றி பெற்றதன் பின் அரசாங்கம் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வேலையில்லாப் பட்டதாரிகள் போன்றோரையும் ஏமாற்றி விட்டது – சஜித் பிரேமதாச

November 18, 2025

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று

pa

இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கிய இந்தியர் மறைவு

November 18, 2025

இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கியவர் என்ற பெருமைக்குரியவரும், இந்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை

dolf

மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள் இராமநாதபுரம் சென்றன?

November 18, 2025

மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு

wome

2025 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

November 18, 2025

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் பெண்களுக்கு

Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy  prison shackle in the jail violence concept.

ஏழாலையில் பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது

November 18, 2025

யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு தயாரிப்பதற்காக

parliament-of-sri-lanka-1-1

கொடுப்பனவை இழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

November 18, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1971 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற

ha

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள்; உள்நாட்டு பாதணி உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு!

November 18, 2025

கல்வி அமைச்சினால் தற்போது 250க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மையமாகக் கொண்டு, பாடசாலைச் சப்பாத்து கொள்வனவிற்காக வழங்கப்படும் வவுச்சர்

tr

புத்தர் சிலை விவகாரம்; தடயவியல் பொலிஸார் கள ஆய்வு

November 18, 2025

திருகோணமலை கடற்கரை பகுதிக்கு சென்ற தடயவியல் பொலிஸார் புத்தர் சிலை விவகாரம், அதன் சேத நிலைவரம் தொடர்பில் கண்டறிய, கள