செம்மணி பணிகள் மிகவும் விரிவானவை, உணர்வுபூர்வமானவை ; மக்கள் உண்மைக்காக காத்திருக்கிறார்கள் ; உண்மையை நிச்சயம் வெளிப்படுத்துவோம் – ஹர்ஷன நாணயக்கார

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான டி.என்.ஏ பரிசோதனைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். செம்மணி மனிதப் புதைகுழி இடத்துக்கு நான் கடந்த வாரம் நேரடியாக சென்றேன். இந்த பணிகள் மிகவும் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை என்பதை விளங்கிக்கொண்டேன். மக்கள் உண்மைக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் உண்மையை நிச்சயம் வெளிப்படுத்துவோம். எவரையும் பாதுகாக்கவோ, உண்மையை மறைக்கவோ வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Geographic Reference

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிருசாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் மறைக்கப்பட்ட விடயங்களை எமது அரசாங்கம் தான் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் எவரும் இந்த விடயங்களை வெளிப்படுத்தவில்லை. உண்மையை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. உண்மையை நாங்கள் வெளிப்படுத்துவோம். எதனையும் மறைக்கவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

செம்மணி மனித புதைக்குழியில் இருந்து இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த விவகாரம் குறித்து முழுமையான விடயங்களை வெளிப்படுத்த முடியாது.

மேலும் கண்டறிக
விளையாட்டு செய்திகள்
கட்டுரை தொகுப்பு
உலக செய்திகள்

மருத்துவ பரிசோதனை மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்றத்துக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படடுள்ளன. காணாமல் போனோரின் உறவுகளிடமிருந்து ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சி பணிகள் மற்றும் அடையாளப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஒன்றிணைந்து நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளது. அதுபோலவே தேசிய மட்டத்தில் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் தூதரகங்களுக்கும் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. டி.என்.எ பரிசோதனைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். தற்போது முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சி பணிகளை நிறைவுப்படுத்தாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியாது.

செம்மணி மனிதப் புதைகுழி இடத்துக்கு நான் கடந்த வாரம் நேரடியாக சென்றேன். இந்த பணிகள் மிகவும் விரிவானது மற்றும் உணர்வுபூர்வமானது என்பதை விளங்கிக்கொண்டேன். மக்கள் உண்மைக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் உண்மையை நிச்சயம் வெளிப்படுத்துவோம். எவரையும் பாதுகாக்கவோ, உண்மையை மறைக்கவோ வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என்றார்.

dead'

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு: காவற்துறையினர் தீவிர விசாரணை!

August 24, 2026

யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANURA PARL

சுரேஸ்சாலேயின் தாயாரும் அனுரவிற்கு கடிதம் எழுதினார்-

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேயின் தடுப்;;புக்காவல் உத்தரவை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீடிக்க கூடாது என சாலேயின் தாயார்

suresh11

சுரேஸ் சாலேக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு – தேசிய அமைப்புகளின் ஒன்றியம்

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிப்பதை ஜனாதிபதி தவிர்க்கவேண்டும் அவரை உடனடியாக

778972206_1621427252686601_4469929818179508992_n

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்க இராணுவம் முயற்சி: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு..!

August 24, 2026

பலாலி பகுதியில், இராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுற்றி நடைபெறும் போராட்டத்தில் இன்றைய தினம்

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்