செம்மணி பணிகள் மிகவும் விரிவானவை, உணர்வுபூர்வமானவை ; மக்கள் உண்மைக்காக காத்திருக்கிறார்கள் ; உண்மையை நிச்சயம் வெளிப்படுத்துவோம் – ஹர்ஷன நாணயக்கார

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான டி.என்.ஏ பரிசோதனைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். செம்மணி மனிதப் புதைகுழி இடத்துக்கு நான் கடந்த வாரம் நேரடியாக சென்றேன். இந்த பணிகள் மிகவும் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை என்பதை விளங்கிக்கொண்டேன். மக்கள் உண்மைக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் உண்மையை நிச்சயம் வெளிப்படுத்துவோம். எவரையும் பாதுகாக்கவோ, உண்மையை மறைக்கவோ வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Geographic Reference

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிருசாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் மறைக்கப்பட்ட விடயங்களை எமது அரசாங்கம் தான் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் எவரும் இந்த விடயங்களை வெளிப்படுத்தவில்லை. உண்மையை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. உண்மையை நாங்கள் வெளிப்படுத்துவோம். எதனையும் மறைக்கவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

செம்மணி மனித புதைக்குழியில் இருந்து இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த விவகாரம் குறித்து முழுமையான விடயங்களை வெளிப்படுத்த முடியாது.

மேலும் கண்டறிக
விளையாட்டு செய்திகள்
கட்டுரை தொகுப்பு
உலக செய்திகள்

மருத்துவ பரிசோதனை மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்றத்துக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படடுள்ளன. காணாமல் போனோரின் உறவுகளிடமிருந்து ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சி பணிகள் மற்றும் அடையாளப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஒன்றிணைந்து நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளது. அதுபோலவே தேசிய மட்டத்தில் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் தூதரகங்களுக்கும் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. டி.என்.எ பரிசோதனைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். தற்போது முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சி பணிகளை நிறைவுப்படுத்தாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியாது.

செம்மணி மனிதப் புதைகுழி இடத்துக்கு நான் கடந்த வாரம் நேரடியாக சென்றேன். இந்த பணிகள் மிகவும் விரிவானது மற்றும் உணர்வுபூர்வமானது என்பதை விளங்கிக்கொண்டேன். மக்கள் உண்மைக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் உண்மையை நிச்சயம் வெளிப்படுத்துவோம். எவரையும் பாதுகாக்கவோ, உண்மையை மறைக்கவோ வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என்றார்.

CWY7Q7QYY5DLXEWDI2XETVXMWU

முக்கிய ஆதாரங்கள்’ பறிமுதல்: கேப் பிரெட்டன் நபர் மீது பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு

June 26, 2026

இந்த வார தொடக்கத்தில் வீடு ஒன்றிலிருந்து “முக்கிய ஆதாரங்களை” பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அதனைத் தொடர்ந்து கேப் பிரெட்டன்

police rcmp

நியூ பிரன்சுவிக் (N.B.) பால்மோரல் அருகே விபத்தில் ஒருவர் பலி: இரண்டு வாகனங்களைத் தேடும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு

June 26, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள பால்மோரல் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

hamilton police1

ஹாமில்டனில் வாகன நிறுத்துமிடத் தகராறு: பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய இரு பெண்கள் கைது

June 26, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton, Ont.) நகரில் கடந்த வார இறுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் (Parking spot) தொடர்பாக ஏற்பட்ட

10_thirumavalavan-expresses-anguish-over-criticisms-26-06-2026

இழிவாக விமர்சித்து வருகிறார்கள்; வீடியோ வெளியிட்டு திருமாவளவன் ஆதங்கம்!

June 26, 2026

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து வீடியோ வாயிலாக விரிவான

9

எ.வ.வேலு வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

June 26, 2026

ஈரோடு: சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில்

8

பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் -மதிமுக எம்எல்ஏ செந்தில்செல்வன் திட்டவட்டம்

June 26, 2026

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த அறிகுறிகளை வெளிப்படுத்திய நிலையில், அக்கட்சியின் சீர்காழி சட்டமன்ற

732081906_1056317700399332_4953181948006225811_n

வின்சர் நகரில் $30,000 மதிப்பிலான அரிய வகை பறவைகள் திருட்டு: ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு

June 26, 2026

வின்சர் (Windsor) நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றிலிருந்து சுமார் 30,000 டாலர் மதிப்பிலான 30 அரிய வகை (Exotic) பறவைகள்

7

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? – அவரே அளித்த பதில்

June 26, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில்,

6

இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு?

June 26, 2026

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதி இடைத்தேர்தல்கள் அரசியல் களத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம்

PEOPLE ACT

உரிமைப்பந்தம்” அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்சக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அமைதிவழி மக்கள் எழுச்சி

June 26, 2026

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் உண்மைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதி கோரும் குரலை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த

LFD5GM35XRC7XA4LQ5POAXKYLA

வோன் மாளிகையைச் சாம்பலாக்கிய தீ விபத்தின் பின்னணியில் தீவைப்புச் சதி என சந்தேகம்: பொலிஸ்

June 26, 2026

வோன் (Vaughan) நகரில் உள்ள ஒரு மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தீவைப்புச் சதி (Arson)

sar

சரித் அபேசிங்கவின் உறுப்பினர் நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

June 26, 2026

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி