யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு வீதி புனரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் புனரமைப்பு வேலைகள் பருத்தித்துறை பிரதேசசபையால் நேற்றைய(21) தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் இந்தவீதியினூடான போக்குவரத்துகள் யாவும் 21.01.2026 தொடக்கம் 25.01.2026 திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் மாற்றுப் பாதையின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை பிரதேசசபையின் உறுப்பினர் குறிஞ்சிக்குமரன் கேட்டுக் கொண்டுள்ளார்.