செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகம் ஒன்றுக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த உணவகத்திற்கு 70,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனைத் தற்காலிகமாக மூடவும் (சீல் வைக்கவும்) நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களைச் சோதனையிட்டனர்.

இந்தச் சோதனையின் போது, குறித்த உணவகம் பொதுச் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை கண்டறியப்பட்டது. குறிப்பாக:

உணவகத்தின் கழிவுநீர் முறையான வடிகால் வசதியின்றி திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டமை.

உணவு தயாரிப்பதற்காகக் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் கடலை ஆகியவற்றில் பெருமளவிலான வண்டுகள் காணப்பட்டமை.

இது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தவேந்திரராஜாவினால் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான், பின்வரும் கட்டளைகளைப் பிறப்பித்தார்:

அபராதம்: உணவக உரிமையாளருக்கு 70,000/- ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
தற்காலிகத் தடை: உணவகத்தில் சுட்டிக்காட்டப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் திருத்த வேலைகளைச் செய்து முடிக்கும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.
பொருட்கள் அழிப்பு: கைப்பற்றப்பட்ட வண்டுகள் நிறைந்த பெருமளவிலான உணவுப் பொருட்களை உடனடியாக அழிக்க உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், மனிதப் பாவனைக்கு உதவாத அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் அதிகாரிகளால் அழிக்கப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தில் அக்கறையின்றி செயற்படும் உணவகங்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

thiga

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

March 8, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே

ne

நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

March 8, 2026

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரில்,

van

செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

March 8, 2026

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட

va

வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

March 8, 2026

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு

lax

தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

March 8, 2026

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

vi

உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

March 8, 2026

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை

st

பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு…

March 8, 2026

திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும்.

e

தமிழக சட்டமன்றத் தேர்தல்; உங்கள் வாக்குக்கு நான் வரிசெலுத்த முடியாது – வினோதினி

March 8, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்

vij

விஜய் – சங்கீதா விவாகரத்து: ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு?

March 8, 2026

விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் புது திருப்பமாக நீதிமன்றத்திற்கு வெளியே பேசி ரூ. 225 கோடி கொடுத்து எல்லாம் முடிவாகிவிட்டதாக

san

துப்பு துலக்கும் நிபுணராக சந்தானம்…

March 8, 2026

கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருபதாவது திரைப்படத்தில் நடிக்கும் சந்தானம்.. அப்படத்தில் கால பயணத்தின் அடிப்படையில் துப்பு துலக்கும் நிபுணராக

tez

‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

March 8, 2026

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு

po

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ பிளடி பாலிடிக்ஸ்’

March 8, 2026

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக அரசியல் கள பின்னணியில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு