வடக்கு – கிழக்கு யுத்தம் சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே உருவானது!

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய, சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே வடகிழக்கில் தேவையற்ற யுத்தம் உருவானதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நமது நாட்டின் அரசியல் உலகை உற்றுநோக்கினால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எந்தவொரு தவறான செயலையும் செய்யத் துணியும் நிலையையே காண முடிகின்றது. நாம் செய்யும் செயல் சரியானதா தவறானதா, சட்டப்பூர்வமானதா அல்லது பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்று எவருமே சிந்திப்பதில்லை. தற்போதைய சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை இந்த அரசியல் குறுக்கு வழிகளாகும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒரு தேர்தலை நடத்தி புதியதொரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதற்கு அடுத்த நாள் முதலே இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாம் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்ற குறுகிய அரசியல் வியாபாரமே இங்கு ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள், எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக்கட்டியெழுப்புவோம் என்று எவரும் சிந்திப்பதில்லை. எப்போதும் மற்றவர்களின் கால்களை இழுத்து வீழ்த்தவே பார்க்கின்றனர். இதுவே அதிகாரத்தைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற எவ்வித இன, மதப் பாகுபாடுகளும் இன்றி அனைத்து மக்களும் சகோதரர்களாக ஒன்றிணைந்தே சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் நாட்டைச் சரியான பாதையில் முன்னோக்கிக் கொண்டு சென்றன.

எனினும், 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய மற்றும் சுயநல அரசியல் குறுக்கு வழிகளினால் இந்த நாடு முற்றாக வீழ்ச்சியடைந்தது. வடகிழக்கில் ஏற்பட்ட யுத்தமும் இத்தகையதொரு தேவையற்ற அரசியல் சுயநலத்தால் உருவானதே ஆகும்.

எமது நாட்டின் 75 அரசியல் ஆண்டுகாலப் பேரழிவுக்குப் பின்னால் இருப்பது இந்த அரசியல் குறுக்கு வழிகளேயாகும். அத்தகைய குறுக்கு வழிகளைத் தேடி நமது நாட்டுத் தலைவர்கள் எந்தவொரு கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணிந்தனர். இத்தகைய குறுக்கு வழிகள் மூலம் இலங்கையை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது. நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அர்ப்பணிப்பு அவசியமாகும்.

நீதியும் நேர்மையும் என்பது அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போல சுலபமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல் அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தவறான செயல்களைச் செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மனச்சாட்சிக்கு இணங்க வேலை செய்யப் பழக வேண்டும். எனவே, வாழ்க்கையிலோ அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதிலோ குறுக்கு வழிகள் என்று எதுவுமே கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்