சீசனை தூக்கி நிறுத்தும் திவாகர்!

இந்த சீசன் தொடங்கும்போதே முந்தைய சீசன்களோடு ஒப்பிட்டு இதன் போட்டியாளர்கள் தேர்வையும், கன்டென்ட் டீமையும் தொடர்ந்து சமூக வலைதளங்களை பிக்பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

அதிலும் முதல் வாரம் அத்தியாசிய தேவையான தண்ணீரை நிறுத்தி போட்டியாளர்களை சோதித்தது எல்லாம் பார்ப்பவர்களுக்கே அசூயையை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். குறிப்பாக, முக்கால்வாசிக்கு மேல் தெரியாத முகங்கள் என்னும்போது சொல்லவே வேண்டாம். இப்படியாக பெரிய அளவில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த சீசனில் திடீர் திருப்பமாக எந்தவித திட்டமிடலுமே இல்லாமல் அமைந்ததுள்ளது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் + கானா வினோத் கூட்டணி.

இந்த வார சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்குள் செல்ல பிக்பாஸ் அணியிலிருந்து கானா வினோத், பார்வதி, திவாகர் மூவரும் தேர்வு செய்யப்பட்டனர். வழக்கமாக பார்வதி – திவாகர் கூட்டணிதான் சீசன் தொடங்கியது முதல் பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களிடமிருந்து விலகி இருந்தது. அல்லது இவர்களை விட்டு மற்றவர்கள் விலகி இருந்தனர். இந்தச் சூழலில் ஒரு டாம் & ஜெர்ரி போல, கவுண்டமணி – செந்தில் போல, மெய்யழகன் அரவிந்த்சாமி – கார்த்தி கூட்டணி போல எதிர்பாராத விதமாக அமைந்தது திவாகர் – வினோத் கூட்டணி.

திவாகரை சூப்பர் டீலக்ஸ் வீட்டில் உக்கார வைத்து வினோத் கைரேகை ஜோசியம் பார்க்கத் தொடங்கியதிலிருந்து இந்த கூட்டணியில் ரகளைகள் ஆரம்பாகின. இதன் பிறகு லான் ஏரியாவில் அவர்கள் இருவரும் உட்கார்ந்து பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவர்கள் இருவரும் பேசுவது என்னவோ சீரியஸாகத்தான். ஆனால், பார்ப்பவர்களுக்கு அது குபீர் சிரிப்பை வரவழைத்து விடுகிறது.

அதிலும் திவாகர் தன் பெயரை அவரையே அறியாமல் மற்றவர்களை அழைக்கும்போது வினோத் காட்டும் எதிர்வினைகள் எல்லாம் இன்னும் பல சீசன்கள் கடந்தாலும் நின்று பேசும். பிக்பாஸ் இந்த சீசனை பார்க்காதவர்கள் கூட சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகளை பகிர்ந்து ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தக் கூட்டணி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்னொரு பக்கம் இந்த வாரத்தின் மற்றொரு முக்கிய பேசுபொருளான விஷயம் துஷாரின் தலைவர் பதவி பறிப்பு. எந்த சீசனிலும் இல்லாத வகையில் கேப்டனுக்கு என்று தனி வீடு என சொகுசு செய்து வைத்திருக்கிறார் பிக்பாஸ். ஆனால் சீசனின் முதல் தலைவரே மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போல எதுவும் செய்யாமல் இருந்தது அவரே கடுப்பாக்கி விட்டிருக்கிறது.

ஆரோரோவுடன் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே முழு வேலையாக செய்து கொண்டிருந்த துஷாரிடம் இருந்து தலைவர் பதவியை பிடுங்கி கடுமை காட்டினார் பிக்பாஸ்.

ஒவ்வொரு சீசனிலும் ஏதோ ஒரு லவ் கன்டென்ட் இருக்கத்தான் செய்யும். அது ஒரு பக்கம் இருக்கும், போட்டியாளர்கள் தங்கள் டாஸ்க்குகளை சரிவர இன்னொரு பக்கம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த சீசனில் மற்ற போட்டியாளர்கள் செய்யும் விஷயங்களை லவ் கன்ட்டென்ட்டுகள் ஓவர் டேக் செய்துவிடுகின்றன. அது காதலா, நட்பா, கிரஷ்ஷா என பார்வையாளர்களுக்கு மட்டுமில்லை, சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியவில்லை.

இந்த லவ் கன்டென்ட் குரூப் பாரபட்சமே இல்லாமல் விதிமீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மைக்கை பொத்திக் கொண்டு ரகசியம் பேசுவது, சில நேரங்களை மைக்கையே மாட்டாமல் பேசுவது போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்ததே துஷாரின் பதவி பறிபோனதற்கு முக்கிய காரணம். அனைவரையும் நடுவீட்டில் உட்கார வைத்து ‘ஒழுக்கமே இல்லாத சீசன் இதுதான்’ என்று பிக்பாஸே சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

முதல் வாரத்திலேயே போட்டியாளர்களிடம் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக கடுமை காட்டிய விஜய் சேதுபதி இந்த வாரம் நடந்த விதிமீறல்களை எப்படி கையாளப் போகிறார் என்று பார்க்கலாம்.

HinduTmail

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்