சிறந்த நூலகங்களுக்கான விருது நிகழ்வு

2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி அவர்களின் தலைமையில் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

2024ஆம் பயனுள்ள வகையில் வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்களைச் செயற்படுத்திய மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் மற்றும் பாடசாலை நூலகங்கள் என ஏறத்தாழ 1500 நூலகங்கள் இவ்விருதுக்காக அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில், நாடு முழுவதிலும் இயங்கி வருகின்ற நூலகங்களுள் கடந்த வருடம் மிகவும் சிறப்பாக தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தியதுடன், வாசிப்பை மேம்படுத்தும் விசேட செயற்றிட்டங்களை சிறப்பாக செயற்படுத்திய 52 நூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்விழாவில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பேத்தாழை பொதுநூலகம், வாழைச்சேனை பொதுநூலகம், விநாயகபுரம் பொதுநூலகம், சந்திவெளி பொதுநூலகம், தேவபுரம் பொதுநூலகம் என 05 பொதுநூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டமை மிகவும் குறிப்பிடத்தக்கது. அகில இலங்கை ரீதியாக 2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளவற்றுள் அதிக நூலகங்களைக் கொண்ட பிரதேச சபையாக மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை விளங்குகின்றது.

பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பொதுநூலகங்களுக்கான தேர்வில் அகில இலங்கை ரீதியாக பேத்தாழை பொதுநூலகம் மீண்டும் முதலிடம் பெற்றுக் கொண்டது. இதற்கான விருதினை பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி அவர்களும், சான்றிதழினை தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க அவர்களும் வழங்கி வைக்க பேத்தாழை பொதுநூலகப் பொறுப்பாளர் மரகதம் பிரகாஷ், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப். அப்துல்லா ஹாரூன், நூலக உத்தியோகத்தர்களான புஸ்பா தயாளன், புனிதா ஈவெரா, கந்தையா கங்கா ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

வாழைச்சேனை பொதுநூலகத்தின் சார்பாக நூலகப் பொறுப்பாளர் தாரணி தங்கத்துரை அவர்களுடன் சிவனேஸ்வரி செல்வேந்திரன், தனுஜா துரைசாமி, அரியநாயகம் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். சந்திவெளி பொதுநூலகத்தின் சார்பாக நூலகப்பொறுப்பாளர் சுதாமதி அருள்பிரகாசம் அவர்களும், சிவஞானசெல்வரெட்ணம் குகதீசன் அவர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர். தேவபுரம் பொதுநூலகத்தின் சார்பாக நூலகப்பொறுப்பாளர் நடராஜமணி புலேந்திரன் அவர்களும், கணேசமூர்த்தி ரவீந்திரன் அவர்களும் இணைந்து பெற்றுக்கொண்டனர். விநாயகபுரம் பொதுநூலகம் சார்பாக நூலகப்பொறுப்பாளர் கணபதிப்பிள்ளை பிறேம்குமார் அவர்களும், ஆறுமுகம் அருமைநாயகம், நிலக்சினி மஞ்சுதராஜ் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில், நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. சுனில், தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் செனானி பண்டார மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பிரதிப் பணிப்பாளர் இரோமி விஜேசுந்தர மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட நாடு முழுதிலுமிருந்து விருதுக்காக தேர்வுசெய்யப்பட்ட நூலகங்களில் பணிபுரிகின்ற நூலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

தமிழக-மக்கள்-கழகம்

விஜய்க்கு எதிராக நடிகர் அஜித் அரசியலா? “தமிழக மக்கள் கழகம்” – கள்ளக்குறிச்சியில் ரசிகர்கள் புதிய கட்சி தொடக்கம்!

September 20, 2026

கள்ளக்குறிச்சி: திரைப்படங்களிலும் கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழக மக்கள்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

RAJMOHAN3

“மு.க.ஸ்டாலின் பட்டிமன்றப் பேச்சாளரைப் போல் எதுகை மோனையில் பேசுகிறார்!” – அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்

September 20, 2026

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளை விளக்கியதுடன்,

tn-che-08-vinayagar-script-photo-7204807_20092026210403_2009f_1789918443_215

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் அடுத்தடுத்து மோதல் மற்றும் சலசலப்பு!

September 20, 2026

சென்னை: பலத்த காவல் துறை பாதுகாப்புக்கு மத்தியில், சென்னையில் இன்று நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டினப்பாக்கம்

images (12)

“அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்குவால் அல்ல; உண்ணிக் காய்ச்சலால்!” – சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அண்ணா பல்கலைக்கழக மாணவரின் உயிரிழப்பு

HH9G3vpboAECv_k

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை!” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நாளை அவசர ஆலோசனை!

September 20, 2026

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையிலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நாளை முதல் 21 மாவட்டங்களில்

1200-675-27675426-thumbnail-16x9-protestannouncement

“பிற மாநிலங்களுக்கு இணையான ஊதியம் தேவை!” – அக்டோபர் 5-ல் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

September 20, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், தங்களுக்குப் பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வு மற்றும் பணிப்பெயர் மாற்றம்

Tamil_News_lrg_4088019

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கோயம்புத்தூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

September 20, 2026

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நாளை

1200-675-26075167-thumbnail-16x9-ctrnirmal

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது!” – அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

September 20, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார்,

tamil-nadu-govt-employees

5 மாதங்களில் ரூ. 30,021 கோடி நிதிப் பற்றாக்குறை: தவெக அரசின் வரவு – செலவு கணக்கு வெளியீடு!

September 20, 2026

சென்னை: 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தமிழ்நாடு அரசின் தற்காலிக நிதிநிலை அறிக்கையை

sivajisanthi

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்

September 20, 2026

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்