வெலிகந்த அசேலபுரத்திலிருந்து குருலுபெத்த நோக்கிச் செல்லும் சாலையைக் கடக்கச் சென்ற சிறுவன் ஒருவன், சனிக்கிழமை (08) இரவு 7:00 மணியளவில், டிராக்டர் வாகனம் மோதி உயிரிழந்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகந்த, அசேலபுர, மகாவலி ஹவுஸைச் சேர்ந்த டபிள்யூ.எச்.டி. மதீஷா கவிஸ்க என்ற சிறுவன் என்று பொலிஸார், கூறுகின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய பெரிய டிராக்டர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.ஆர். குமாரசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு, இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.