சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் மாதா சிலை?

மன்னார் சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் தனி நபர் ஒருவரால் எந்த ஒரு அனுமதியும் இன்றி மாதா சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாந்திபுர விளையாட்டு கழகத்தினால் குறித்த மைதானத்தில் சிலை வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக எழுத்து மூலம், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நகரசபை தலைவர் குறித்த விளையாட்டு மைதானத்துக்கு முன்பு தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் சிலை மாற்றி வைக்கப்பட்டதுடன், உரிய அனுமதி கிடைத்தால் மாத்திரம் சிலை வைக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் இடம்பெற்ற மன்னார் நகரசபை அமர்வில் குறித்த சிலை வைத்த விடயம் தொடர்பாக பேசப்பட்ட நிலையில், இரு உறுப்பினர்கள் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்.

ஆனால் அங்குள்ள இளைஞர் கழகம் சிலை வைப்பதற்கு அனுமதிக்கவில்லை எனவும், காந்திபுரத்தில் உள்ள சில பொது அமைப்புகள் மாத்திரம் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு இல்லை என கடிதம் வாங்கியிருப்பதாகவும், எனவே இது ஒரு முரண்பாடான விடயம்.

எனவே உரிய அமைச்சு மற்றும் ஆளுநரிடம் அனுமதிக்கு அனுப்பி பின்னர் அனுமதி வழங்க வேண்டும் என தவிசாளர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னனியில் நேற்றைய தினம் எந்த ஒரு அனுமதியும் இன்றி உரிய தரப்புக்கு அறிவிக்கப்படாமல் மீண்டும் குறித்த சிலை விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டு கழக பிரதிநிதிகள் மன்னார் நகரசபை தலைவரிடம் வினவியபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும்,சபையில் அனுமதி கிடைத்து விட்டதாகவும் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நகரசபை செயலாளரிடம் இளைஞர் கழக உறுப்பினர்கள் வினவியபோது இவ்வாறான சிலைகள் வைப்பதற்கு சபை அனுமதி வழங்கவில்லை என்றும் அவ்வாறு வழங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் விளையாட்டுக்காக மைதானத்தை பயன்படுத்து விளையாட்டுக்கழகம் மற்றும் உரிய அரச நிறுவனங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாது குறித்த சிலை வைக்கப்பட்டுள்ளமை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

குறித்த சிலை முன்னதாக மாற்றி வைக்கப்பட்ட தனியார் காணியில் இருந்த போது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரம் குறித்த சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் அதே மத சிலையும் 500 மீற்றர் தூரத்தில் அதே கோவிலும் இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் விளையாடும் மைதானத்தில் ஏன் இந்த செயல்பாடு என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து