சர்வதேச நாணய நிதியத்தின் 5வது கடனைப் பெறுவதில் நெருக்கடியை

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது கடன் தவணையை பெறுவதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்த வெள்ள நிவாரணத்திற்கான சுமார் 70 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு கூட்டம் எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு ஐந்தாவது கடன் தொகையை விடுவிப்பது குறித்து இறுதி முடிவு இதன்போதே எடுக்கப்பட உள்ளது.

வெள்ள நிவாரணத்திற்காக சுமார் 70 பில்லியனை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், உடனடியாக வெள்ளப் பேரழிவுக்கு வரிப் பணத்தைப் பயன்படுத்துவது பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அது பொருளாதார நெருக்கடியை மேலும் ஆபத்தான சூழ்நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும் நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், சேதம் குறித்த குறிப்பிட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு, பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, 70 பில்லியன் ரூபா நிவாரண திட்டத்தை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், இலங்கையின் திடீர் பேரழிவைச் சமாளிக்க ஒரு சிறப்பு நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக நாணய நிதிய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இலங்கையை ஆதரிக்கும் சர்வதேச நாடுகளை அழைத்து ஆதரவு மாநாட்டைக் கூட்டுவதற்கு அரசாங்கம் முன்முயற்சி எடுக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினர். இதனூடாக சேதமடைந்த பாலங்கள், வீதிகள் மற்றும் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பொருட்படுத்தாமல், அரசாங்கம் மக்களுக்கு 70 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்தால், அது இரு தரப்புக்கும் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் ஐந்தாவது கடன் தவணையை நாணய நிதியம் ஒத்திவைக்கக் கூடும். இந்தக் குழப்பமான சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கும் இடையே ஒரு சிறப்பு தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. எனினும், நிதி விடுவிப்பு தொடர்பாக எந்த ஒரு இறுதியான உடன்பாடும் இதன் போது எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்