விசேட தேவையுடைய மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கற்க வாய்ப்பு

இலங்கையில் விசேட தேவையுடைய மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் மருத்துவத்துறை, பொறியியல் துறை மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட தங்களின் திறமைகளுக்கு ஏற்ற எந்தவொரு துறையிலும் பல்கலைக்கழக உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் விசேட தேவையுடையோர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் விசேட தேவையுடையோர் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும்போது மனிதநேய மற்றும் சமூக அறிவியல் (கலைத்துறை), மேலாண்மை, பௌதிக அறிவியல் மற்றும் உயிரியல் அறிவியல் ஆகிய நான்கு பிரதான துறைகளுக்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதோடு, இனிவரும் ஆண்டுகளில் திறமைமிக்க வி.சேட தேவையுடையேோர் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற எந்தவொரு உயர்கல்வித் துறையையும் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க விசேட தேவையுடையோர் நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விசேட சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதோடு, அது மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அதேபோன்று, நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான செவிப்புலன் குறைபாடுடையோரின் தகவல் தொடர்பாடலுக்குப் பயன்படும் சைகை மொழியை, நாட்டின் ஏனைய மொழிகளான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்று சட்டப்பூர்வமாக்குவதற்கான விசேட சட்டமூலமும் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன் அதுவும் சட்டமாக்கப்படும். மேலும், நாட்டில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விசேட தேவையுடையோர்களைக் கொண்ட சுமார் 175,000 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக அரசாங்கத்தினால் மாதாந்தம் 5,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கல்வித் துறையைப் பொறுத்தவரை, பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் ஏனைய மாதாந்த அரச நிதியுதவிகள் 100 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, 2026 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக விசேட தேவையுடையோர் பல்கலைக்கழக மாணவர்களுக்காக மாதாந்தம் மேலும் 5,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் சுயலாபங்களுக்காக ஜனாதிபதி நிதியம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது அந்த நிதியம் முற்றிலும் மக்களின் அத்தியாவசிய நலன்புரிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது நாட்டின் 17 அரச பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் சுமார் 370 விசேட தேவையுடையோர் மாணவர்களுக்கும், அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் அனைத்து விசேட தேவையுடையோர் மாணவர்களுக்கும் அவர்களின் முதலாம் ஆண்டிலேயே ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நிதியுதவிகளை நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இறுதியாக, இனம், மொழி, பாலினம் அல்லது எவ்வித உடல் ரீதியான குறைபாடுகளும் இன்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் சமத்துவம் மற்றும் நீதியானதொரு சமூகத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்