கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள், போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கண்காணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா–தென் கொரியா இராணுவ பயிற்சிகளுக்கு பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Korean Central News Agency வெளியிட்ட படங்களில், ஒரு மாநாட்டு அறையில் அமர்ந்திருந்த இருவரும், ஒரு திரையில் Choe Hyon என்ற போர்க்கப்பலில் இருந்து ஆயுதங்கள் ஏவப்படும் காட்சிகளை பார்ப்பது காட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காணொளி மூலம் ஏவுகணை ஏவுதலைக் கவனித்த கிம் ஜோங் உன், “வலுவான மற்றும் நம்பகமான அணு போர்தடுப்பு திறனை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தியதாக KCNA தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில் அவரது மகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சுமார் 13 வயதாகும் அவரது மகள் Kim Ju Ae, 2022 இறுதியில் இருந்து இராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஆயுத சோதனைகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் தந்தையுடன் தோன்றிவருகிறார்.

கடந்த மாதம் தென் கொரியாவின் உளவு அமைப்பு, கிம் ஜோங் உன் தனது வாரிசாக அவரை அறிவிக்க நெருக்கமாக உள்ளதாக மதிப்பிட்டிருந்தது.

KCNA தகவலின்படி, ஏவப்பட்ட ஏவுகணைகள் வடகொரியாவின் மேற்கு கடற்கரை அருகிலுள்ள இலக்கு தீவுகளைத் துல்லியமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த ஏவுதல்கள் கடற்படையின் மூலோபாய தாக்குதல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், படையினரை ஆயுதப் பயன்பாட்டில் பழக்கப்படுத்தவும் நடத்தப்பட்டதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் Choe Hyon போர்க்கப்பலில் இருந்து இதே போன்ற க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை கிம் ஜோங் உன் நேரில் கண்காணித்திருந்தார். ஆனால் அந்த நிகழ்வில் அவரது மகள் காணப்படவில்லை. இந்த ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் வசந்தகால இராணுவ பயிற்சிகள் தொடங்கிய பின்னர் இடம்பெற்றுள்ளன.

hur

ஆபத்தான கண்ணிவெடிகளை ஹார்முஸ் ஜலசந்தியில் இறக்கிய ஈரான்!

March 11, 2026

உலகின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் ஆபத்தான கண்ணிவெடியை வைத்துள்ளமையினால் அமெரிக்கா

kim

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

March 11, 2026

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள், போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை

45

வடக்கின் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்தில் 10 சதவீதமாக உயரும்!

March 11, 2026

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது, எதிர்வரும்

sur4

சிறையில் சுரேஷ் சலேவை கொலை செய்ய சதித் திட்டம்?

March 11, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை சிறையில் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்

44

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் மண்டைதீவு சுற்றுலா மையம் தொடர்பாக முறைப்பாடு

March 11, 2026

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர்

Daugh

ஒன்டாரியோவில் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை விரிவாக்கப்பணிகள் ஆரம்பம் – முதல்வர் டக் பேர்ட்

March 11, 2026

ஒன்டாரியோ அரசு 174 மில்லியன் டொலர் முதலீட்டுடன் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை (Stevenson Memorial Hospital)புனரமைப்புத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை

WhatsApp Image 2026-03-11 at 10.45.13

கனடா மிசிசாகா பிரதேச திருட்டு விசாரணை; 13 வாகனங்கள் மீட்பு

March 11, 2026

பீல் பிராந்தியம் – 11 டிவிஷன் தானியங்கிப் பதில் வழங்கிக் குழு (Break and Enter Auto Response Unit)மற்றும்

jud

84 ஈரானிய சடலங்களையும் ஒப்படைக்குமாறு உத்தரவு

March 11, 2026

அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இரண்டு குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை

tx

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வோஷிங்டனில் பரபரப்பு

March 11, 2026

மெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற ‘நேஷனல் மால்’ (National Mall) பகுதியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும்

b

நாட்டில் பேக்கரித் தொழில் பாதிப்பு!

March 11, 2026

நாட்டில் தற்போது டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மூலங்களைப் பெற்றுக்கொள்வதில் பேக்கரித் தொழில்சார்ந்தோர் பெரும் சிரமங்களை

sss

நாவிதன்வெளியில் விசேட தேவையுடையவருக்கு வாழ்வாதார உதவி

March 11, 2026

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு. புவனரூபனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், விசேட தேவையுடைய ஒருவருக்கு கோழிக்கூடு மற்றும்

ku

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

March 11, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் புதன்கிழமை (11)