பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை, நேற்று சனிக்கிழமை (1) மாலை, பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 104 கிலோகிராம் 660 கிராம் கேரள கஞ்சா கொண்ட 45 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.