பொத்துவில்- கோமாரி களுகொள்ள பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பு நிலையம் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வை நேற்று (28) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கோமாரி மக்கள் தமது குடிநீர் வசதிகளை செய்து தருமாறு இந்திய அரசிடம் கோரியதற்கு அமைய நீண்டகாலமாக குடிநீர் இன்றி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் களுகொள்ள பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின் கீழ் பல இலட்சம் ரூபா பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் அந்த பகுதியில் பஸ் தரிப்பு நிலையம் ஒன்றையும் இந்திய மக்களின் நிதி பங்களிப்புடன் புனர்நிர்மானித்தனர். இதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் பெயர் பலகைகளை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தனர்.