கிழக்கு மாகாண அதிபர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக கிழக்கில் கவனயீர்ப்பு

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகக் கடமை நிறைவேற்று அதிபர்களாகப் பணியாற்றும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும், இன்று (20) காலை 10.00 மணியளவில் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய ‘கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்க’ப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததைத் தொடர்ந்தே, அவர்கள் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய கோரிக்கைகள்:

நீண்டகாலமாகச் சேவையாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்.

வயது எல்லையைக் கடந்த முன்னாள் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குதல்.

அதிபர் சேவைக்குரிய சம்பளம், பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய நலன்களை வழங்குதல்.

திடீர் இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர் பணிக்கு மீள அனுப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி, மனிதநேயமான தீர்வுகளை வழங்குதல்.

கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களங்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு இணைந்து நிலையான கொள்கையொன்றை உருவாக்குதல்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனை:

போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டு யுத்தம், 2004 சுனாமி, வெள்ளப் பேரழிவுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலம் எனப் பல்வேறு சவாலான சூழ்நிலைகளிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பாடசாலைகளை வழிநடத்தியவர்கள் நாங்களே. ஆனால், இன்று எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல், திடீரென ஆசிரியர் பணிக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் எமது தொழில்முறை கௌரவத்தைச் சிதைக்கின்றன” எனத் தெரிவித்தனர்.

மேலும், ஏனைய மாகாணங்களில் இல்லாத வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தங்களுக்கு எதிராகப் பாரபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். நிர்வாக அனுபவம் கொண்ட தங்களை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, வலயக் கல்வி அலுவலகங்களில் கல்வி அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக்கொள்ளுமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

முழக்கங்கள்:

“எமது சேவைக்கு நீதி வேண்டும்; காலதாமதம் வேண்டாம்!”, “கடமை செய்தோம்; உரிமையையும் வழங்குங்கள்!”, “நிர்வாகம் இயங்க எம்மை மதியுங்கள்!”, “நீதி தாமதமானால் அது அநீதியே!”, “அரசியல் வேண்டாம்; நிர்வாக நீதி வேண்டும்!” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி அவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆளுநர் தங்களின் மகஜரைப் பொறுப்பேற்க மறுத்த நிலையில், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் சுழற்சி முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்