கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உபஅதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட எமது உபஅதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமையானது.
மாணவர்களின் நலன் பாதிக்கும் என்றும் இடமாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.