பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை. நீதிமன்றத்தை நாடி பிணை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசைப் பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று (9) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.