கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் சனிக்கிழமை (01) மாலை கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பரும் விபத்துக்கு உள்ளானது.
டிப்பர் சாரதியும் காரில் பயணித்தவர்களும் காயமடைந்துள்ளனர் தமிழ்செல்வன் கதிர் 38 வயது (டிப்பர் சாரதி), வேலாயுதம் சர்வேந்தன் 63 வயது, ஜெகன் மனுஷன் 20 வயது ஆகிய இருவரும் காரில் பயணித்தவர்களாவர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.