கிரிக்கெட் பந்தின் சுற்றளவை அறிய உதவும் ரிங் கேஜ் கருவி!

பொது​வாக கிரிக்​கெட் போட்டி தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக நடு​வர்​கள் போட்​டிக்கு பயன்​படுத்​தும் பந்​தின் எடை, வடிவம் மற்​றும் பந்​தின் தன்மை ஆகிய​வற்றை சோதித்து பார்ப்​பார்​கள். அனைத்​தும் விதி​முறை​களின்​படி சரி​யாக இருந்​தால் மட்​டுமே அந்த பந்தை பயன்​படுத்​து​வார்​கள்.

எம்​சிசி கிரிக்​கெட் சட்ட விதி​களின்​படி பந்​துகளின் அளவு குறிப்​பிட்ட அளவில்​தான் இருக்க வேண்​டும். இது ஆடவர், மகளிர், ஜூனியர் கிரிக்​கெட் போட்​டிகளுக்கு தகுந்​த​வாறு மாறு​படும். ஆடவர் கிரிக்​கெட்​டில் பந்​தின் எடை குறைந்​த​பட்​சம் 155.9 கிராம் எடை​யும் அதி​கபட்​சம் 163 கிராம் எடை​யும் இருக்க வேண்​டும். அதேவேளை​யில் பந்​தின் சுற்​றளவு குறைந்​த​பட்​சம் 22.4 சென்டி மீட்​டரும், அதி​கபட்​சம் 22.9 சென்டி மீட்​டரும் இருக்க வேண்​டும்.

இந்த பந்​துகளின் சுற்​றளவை கணக்​கிடு​வதற்கு நடு​வர்​களிடம் பால் கேஜ் அல்​லது ரிங் கேஜ் என்ற கருவி இருக்​கும். இதில் இரண்டு வளை​யங்​கள் இருக்​கும். ஒன்​றன் பெயர் கோ கேஜ். இது அதிக விட்​டம் கொண்​டது. இதன் வழி​யாக பந்தை நுழைக்​கும்​போது எந்​த​வித இடையூறும் இல்​லாமல் செல்ல வேண்​டும். அப்​படி இருந்​தால் விதி​முறைக்​குட்​பட்​ட அந்த பந்து போட்​டி​யில் பயன்​படுத்த அனு​ம​திக்​கப்​படும். அதாவது கோ கேஜின் சுற்​றளவை​விட பந்​தின் சுற்​றளவு அதி​க​மாக இருக்​கக்​கூ​டாது. ஒரு​வேளை கோ கேஜில் பந்தை நுழைக்​கும் போது அது தட்டி நின்​றால் பந்​தின் சுற்​றளவு அதி​க​மாக இருப்​ப​தாக கருதி அந்த பந்தை பயன்​படுத்த அனு​ம​திக்​க​மாட்​டார்​கள். வேறு ஒரு பந்​தை​தான் பயன்​படுத்த வேண்​டியது இருக்​கும்.

அரு​கில் இருக்​கும் மற்​றொரு வளை​யம் நோ கோ கேஜ் என்​றழைக்​கப்​படும். இது கோ கோஜ் சுற்​றளவை​விட சற்று குறை​வாக இருக்​கும். இந்த வளை​யத்​தில் பந்தை நுழைக்​கும் போது அது வெளியே வரக்​கூ​டாது. அவ்​வாறு இருந்​தால் அந்த பந்து விதி​முறை​களின் படி சரி​யாக உள்​ள​தாக கருதி அனு​ம​திக்​கப்​படும். ஒரு​வேளை பந்து இந்த வளை​யத்​தின் வழியே வெளியே வந்​து​
விட்​டால் அந்த பந்​தின் சுற்​றளவு நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை​விட குறை​வாக உள்​ள​தாக கூறி அதை போட்​டி​யில் பயன்​படுத்த அனு​ம​திக்​க​மாட்​டார்​கள்.

போட்​டி​யின் தொடக்​கத்​தில் மட்​டும் அல்ல இடை​யில் கூட இந்த ரிங் கேஜை பரிசோதனை செய்​வார்​கள். போட்​டி​யின் போது பந்து சேதம் அடைந்து பந்து வீசுவதற்கு உகந்​த​தாக இல்லை என அணி​யின் கேப்​டன் கரு​தி​னால் இது குறித்து களநடு​வரிடம் முறை​யிடு​வார்​கள். அப்​போது அந்த பந்து பயன்​படுத்​தப்​படும் நிலை​யில் உள்​ளதா என ரிங் கேஜ் கரு​வியை கொண்டு நடு​வர் சோதனை செய்​வார். இதில் பந்து நுழைந்து வெளியேவந்து​விட்​டால் அந்த பந்தை தொடர்ந்து பயன்​படுத்​தலாம். மாறாக பந்து வளை​யத்​துக்​குள் நுழைய​வில்லை என்​றால் அந்த பந்​தின் தன்மை மாறி​விட்​ட​தாக கருதி அதை அகற்​றி​விட்டு வேறு பந்தை
பயன்​படுத்​து​வார்​கள்.

கோ கேஜ் வளை​யத்​தில் பந்து நுழைந்​தா​லும், நோ கோஜ் வளை​யத்​தில் பந்தை வைத்து சோதிப்​பார்​கள். இதில் வளை​யத்​தின் பக்​க​வாட்​டில் இடைவெளி இருந்​தால் அந்த பந்து அதன் தன்​மையை இழந்​து​விட்​ட​தாக கருதி அகற்​றி​விடு​வார்​கள். அதற்கு பதிலாக வேறு பந்து பயன்​படுத்​தப்​படும். ஆனால் ஓரளவு மட்​டுமே இடைவெளி இருந்​தால் அந்த பந்தை தொடர்ந்து பயன்​படுத்​தலாம் என்று கூறி​விடு​வார்​கள். பந்து வீசும் அணி புகார் கூறு​வதை​யும், அதன் பின்​னர் நடு​வர் பந்தை சோதித்​து​விட்டு சரி​யாகத்​தான் உள்​ளது என கூறி அந்த பந்தை தொடர்ந்து பயன்​படுத்​தக்​கூறு​வதும், இதற்கு அந்த அணி​யின் கேப்​டன் விரக்​தி​யடைவதும் களத்​தில் நாம்​ அடிக்​கடி பார்க்​கக்​கூடிய​தாக உள்​ளது.

HinduTamil

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி