காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டு:மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்ராணி கிரியெல்ல சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என தெரியவந்துள்ளது.

ஹந்தானை பகுதியில் 43 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்ராணி கிரியெல்லவின் பெயரை தவறாக தொடர்புபடுத்தியமைக்காக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லியனகே பத்மசிறி உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் திகதி பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (cope) முன்னிலையில் தான் வெளியிட்ட அறிக்கை தவறானது என்பதை ஒப்புக் கொண்ட பத்மசிறி நாடாளுமன்ற ஒழுக்காற்று மற்றும் வரப்பிரசாதங்கள் பற்றிய குழுவின் முன்னிலையில் தனது கவலையை தெரிவித்தார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்லவிடம் நேரடியாக மன்னிப்புக் கோரியதுடன் ஒழுக்கhற்றுக் குழு இது குறித்து பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிற்கு அறிவித்துள்ளது.

காணி கையகப்படுத்தல் தொடர்பில் வெளியான தவறான செய்தி நாடாளுமன்ற உறுப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழு குறிப்பிட்டுள்ளது.

தவறான அறிக்கையை திருத்தி நாடாளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு ஒழுக்காற்றுக் குழு பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளது.

ஹந்தானை காணி விவகாரத்தில் தனது பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டதன் மூலம் தனக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனது நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து சமிந்ராணி கிரியெல்ல 2025 ஜூலை 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

அவரது முறைப்பாடு 2026 ஜனவரி 9 ஆம் திகதி ஒழுக்காற்று மற்றும் வரப்பிரசாதங்கள் பற்றிய குழுவினால் பரிசீலிக்கப்பட்ட போதே முன்னாள் பணிப்பாளர் பத்மசிறி மன்னிப்புக் கோரினார்.

இதன் மூலம் நாடாளுமன்றக் குழுக்கள் முன்னிலையில் அளிக்கப்படும் தவறான வாக்குமூலங்களினால் ஏற்படும் வரப்பிரசாத மீறல்கள் மற்றும் நற்பெயருக்கு ஏற்படும் பாதிப்புகள் எவ்வளவு பாரதூரமானவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

fue

மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்?

March 26, 2026

எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருளைத் தட்டுப்பாடுகளின்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர

mark

தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

March 26, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்புவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு

inai

யாழில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 26, 2026

இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நல்லூர் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடிசார் சம்மேளனம் மற்றும்

tea

யாழில் ஆசிரியர்கள் போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸார்

March 26, 2026

மேன்முறையீட்டு முடிவு வரும் வரையில், தங்களை பழைய பணியிடங்களிலேயே (பழைய பாடசாலைகளிலேயே) தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை

ams

எரிபொருள் நெருக்கடி சவால்கள்; சனிக்கிழமைகளில் விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள்

March 26, 2026

தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி சுகாதாரத்துறையினருக்கு பெரும் சுமையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, சனிக்கிழமையை மருத்துவர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்குமாறு

f

ஏயர் கனடா தலைமைச் செயல் அதிகாரியின் ஆங்கில மொழி அறிக்கைக்கு பிரதமர் மார்க் கார்னி கண்டனம்

March 26, 2026

லகுவார்டியா விமான நிலையத்தில் (LaGuardia Airport) நடந்த ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் போது, நிறுவனத்தின்

central-bank

மத்திய வங்கியின் எச்சரிக்கை

March 26, 2026

மத்திய கிழக்கு போர் பதற்றம் தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ex

காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டு:மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்

March 26, 2026

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்ராணி கிரியெல்ல சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என

bea

ட்ரம்ப்கைப் புகழந்த ஈரானிய நடிகையின் சர்கச்சைக்குரிய கருத்து!

March 26, 2026

ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரானிய நடிகையான எல்னாஸ் நோரூசி அவுஸ்திரேலியா தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ட்ரம்ப் மற்றும்

Police_1

சந்தேக நபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள்

March 26, 2026

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது

gro

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

March 26, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து

ggg

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது

March 26, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருளை