களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன், இதனால் மின்மாற்றியின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் லெகோ (LECO) ஊழியர்களும் வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.