கல்விச் செலவின வீழ்ச்சி: இலங்கைக்கு பெரும் பின்னடைவு – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முறையற்ற வரிக்கொள்கை மற்றும் கல்வித்துறைக்கான குறைந்தளவு நிதி ஒதுக்கீட்டினால் பாடசாலைகள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் விளக்கியும், அவற்றுக்கான தீர்வுப்பரிந்துரைகளை உள்ளடக்கியும் ‘வரிச்சலுகைகளும் பாடசாலைகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளும்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 101 பக்க ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
மேற்படி ஆய்வறிக்கையைத் தயாரித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும், வறுமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பான செயற்பாட்டாளருமான சாரா சாதுன் இலங்கையின் வரிக்கட்டமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
2019இல் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட மட்டுமீறிய அளவிலான வரிச்சலுகை வழங்கல் தீர்மானமானது அதன் நீட்சியான தொடர் விளைவுகளால் 2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியதாக 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முன்னெப்போதுமில்லாத வகையிலான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. பொருளாதார நெருக்கடியை அடுத்து கடன்களை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை அரசாங்கம் இழந்தமையானது குறிப்பாக உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களின் வலுவான அதிகரிப்புக்கும், தற்போதுவரை தொடரும் தாக்கங்களான வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் சம்பளக்குறைப்பு போன்ற தாக்கங்களுக்கும் வழிவகுத்தது.
போராட்டங்களால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிபீடத்திலிருந்து துரத்தப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்கள் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டது. அத்தெரிவானது புதிய பொருளாதாரக்கட்டமைப்பை உருவாக்குவதில் இலங்கையர்கள் தெளிவாக இருப்பதைக் காண்பித்தது. அதனை முன்னிறுத்தி அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், தற்போதைய மறுசீரமைப்புக்கள் இந்நெருக்கடியின் ஆணிவேரைக் களைவதற்குப் போதுமானவையன்று.
உயர்நீதிமன்றமானது இந்நெருக்கடிக்கு வழிகோலிய உடனடிக் காரணத்தில் கவனம் செலுத்தியிருந்தது. இருப்பினும் இப்பிரச்சினைக்கான அடிப்படை பல தசாப்தங்களுக்கு முன்னரே உருவாகியிருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். 1970 களின் பிற்பகுதியில் இலங்கை ஒரு பொருளாதார நிலைமாற்றத்தை நோக்கி நகர்ந்தது. பெருநிறுவனங்களுக்கும் தனவந்தர்களுக்கும் சாதகமாக அமைந்த, குறைந்தளவு வருமானத்தையே ஈட்டித்தந்த வரிக்கொள்கைகளும் அதில் உள்ளடங்குகின்றன.
இவை 2022இல் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டதுடன் மாத்திரமன்றி, மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவேண்டிய செலவினங்களில் நிலவும் பாரிய பின்னடைவுக்கும் காரணமாக அமைந்தன. குறிப்பாக 2010 ஆம் ஆண்டளவிலே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகக் காணப்பட்ட கல்விக்கான செலவினங்கள், 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
இவ்வீழ்ச்சியானது முன்னொரு காலத்தில் கல்வித்துறையில் உலகநாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இலங்கை போன்றதொரு நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகும். தமது பிரஜைகளுக்கான இலவச ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அறிமுகப்படுத்திய சில முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். சுதந்திரத்தின் பின்னர் அரச நிதி மூலம் வழங்கப்பட்ட கல்வியானது எழுத்தறிவு வீத உயர்வுக்கும், சமூக மற்றும் பொருளாதார இயங்குகைக்கும், சமத்துவமின்மை வீழ்ச்சிக்கும் பெரிதும் உதவியது.
1960 – 1970க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரச வருமானத்தில் 90 சதவீதமானவை வரிகள் மூலம் திரட்டப்பட்டதுடன் அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 – 25 சதவீதமாகக் காணப்பட்டன. இது 3 – 5 சதவீத நிதி கல்வித்துறைக்கு செலவிடப்படுவதற்குப் பெரிதும் உதவியது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது கல்வி உள்ளடங்கலாக இலங்கையர்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு செயற்திறன்மிக்க வழிமுறைகள் ஊடாக வருமானத்தை அதிகரிப்பதற்கு ஏதுவான வரி மறுசீரமைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். இது மனித உரிமைகளை மையப்படுத்திய பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பவேண்டிய தருணமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

719852590_10242235868731525_4126836530523673060_n

சொல்லிசை பாடகரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

June 10, 2026

சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன்னை உடனடியாக விடுதலை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் இன்று

5XLYI5BEFJCEVNM63BGIUWFOPU

பி.சி (B.C.) பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் பலி, 3 பேர் காயம்

June 10, 2026

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில், ஏழு வயது சிறுமி ஓட்டிய ‘ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்side-by-side vehicle

canada bank gover

பொருளாதார மந்தநிலை (Recession) என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்’: கனடா வங்கி ஆளுநர்

June 10, 2026

கனடா வங்கியின் (Bank of Canada) ஆளுநர் டிஃப் மேக்லம் (Tiff Macklem), இதுவரை தாம் பார்த்த தரவுகளின்படி, நாட்டின்

4CLOLKCC2FG3RAQOW6ITDCPJGY

வடக்கு ஒன்டாரியோவில் கொல்லப்பட்ட பிராம்ப்டன் OPP அதிகாரி தருண் பாலி: நாம் அறிந்தவை

June 10, 2026

செவ்வாய்க்கிழமை மதியம் வடக்கு ஒன்டாரியோவில் பணியின் போது கொல்லப்பட்ட ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரி தருண் பாலி, பிராம்ப்டனைச்

court-judge-hammer-gavel-696x398

அரசு வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த விவகாரம்: விமல் வீரவன்சவின் சகோதரருக்கு வெளிநாட்டு பயணத்தடை

June 10, 2026

அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத்

Screenshot_20260610_143451_Instagram

போலி கனடா கடவுச்சீட்டு மூலம் லண்டன் செல்ல முயற்சி: தாய்லாந்து விமான நிலையத்தில் இலங்கை நாட்டவர் கைது

June 10, 2026

தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில், போலி கனடா நாட்டு கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி

721089767_10242010452096412_6680718909023026465_n

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு இன்று(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது

June 10, 2026

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி

dailythanthi_2026-06-10_7scngxem_Untitled-11

“10, 12-ம் வகுப்பில் மாஸ் காட்டிய மாணவர்களுக்கு ரூ.72 லட்சம் ஊக்கத்தொகை!” – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

June 10, 2026

சென்னை ‘சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம்

kizhakkunews_2025-10-29_bqqnv4dz_CTR-NirmalKumar (1)

“மின்தடையை ஏற்படுத்தி தவெக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இமாலய சதி!” – 125 அதிரடி ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைத்து அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டு!

June 10, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் எவ்வித மின்சாரத் தட்டுப்பாடும் துளியும் இல்லை; ஆனால், ஆங்காங்கே வேண்டுமென்றே செயற்கையான மின்தடையை ஏற்படுத்திப்

che

21ஆம் நாள்; செம்மணி மனிதப் புதைகுழியில் 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம்

June 10, 2026

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 7

image_a55b9f0e51

முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா ஜூன் 12 வரை விளக்கமறியலில்

June 10, 2026

கொழும்பு: தென் மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜயலால் டி சில்வா, கொழும்பு பிரதம நீதவான்

doctor11

பெர்த்தில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இலங்கை மருத்துவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

June 10, 2026

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அக்குபஞ்சர் (Acupuncture) சிகிச்சையின் போது பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை