கனடா போஸ்ட் (Canada Post) நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர் சங்கத்திற்கும் (CUPW) இடையே நிலவி வந்த நீண்டகாலப் பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இழுபறிக்குப் பின், புதிய 5 ஆண்டுகாலத் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், சுமார் 42,000 தபால் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் கணிசமாக உயரும் என்று கூறப்படுகின்றது.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊழியர்களின் வருமானத்தைப் பாதுகாக்க இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நாட்டின் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப ஊதியம் தானாகவே உயரும் வகையில், இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.