கந்தர பொலிஸ் பிரிவில் உள்ள தலல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காணாமல் போனவர் ரன்சேகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞர் மேலும் 05 பேருடன் கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹிரிகெட்டிய பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உயிர்காப்பாளர்கள் மற்றும் கடற்படை இணைந்து காணாமல் போன இளைஞனைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.