ஒண்டாரியோ மாகாணத்தில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, ஆசிரியர் கல்வித் திட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர ஒண்டாரியோ மாகாண அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, கல்லூரியில் படிக்கும் காலத்தைக் குறைத்து, பள்ளிகளில் நேரடியாகப் பணியாற்றும் பயிற்சி நேரத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முறையான அறிவிப்புகள் 2026-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று ஒண்டாரியோ கல்வி அமைச்சர் Paul Calandra தெரிவித்துள்ளார்.
ஒண்டாரியோவில் தற்போதுள்ள ஆசிரியர் பயிற்சி முறை, நாட்டிலேயே மிகக் குறுகிய காலத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது