ஒட்டாவா நகருக்கு மேற்கே உள்ள ஒரு கிராமப்புறப் பகுதியில், 5 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற ஏடிவி வாகனம் (All-Terrain Vehicle) மரம் ஒன்றின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘புருடெனெல், லிண்டாக் மற்றும் ராக்லான்’ (BLR) என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் பண்ணையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தின் போது சிறுவன் தலைக்கவசம் (Helmet) அணிந்திருந்ததாகப் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பலத்த காயமடைந்த அந்த சிறுவன் முதலில் ஆம்புலன்ஸ் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த விபத்து குறித்து ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.