‘எதையும் எதிர்க்கும்’ மனப்பாங்கில் மாற்றம் ஏற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – வடக்கு ஆளுநர்

எமது சமூகத்தில் நல்ல விடயங்களை முன்னெடுப்பவர்களும் நன்மை செய்பவர்களுமே அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளாகின்றார்கள். அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் நிறுவுனர் தினமும், லேடி இராமநாதனின் உருவச்சிலை திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அம்பிகை சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘எதையும் எதிர்க்கும்’ மனப்பாங்கில் மாற்றம் ஏற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதிகாரிகளிடம் காணப்படும் எதிர்மறையான போக்குகளும் இந்த சமூக மனோநிலையின் வெளிப்பாடே ஆகும்.

எனவே, எதிர்காலத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கவுள்ள மாணவர்களாகிய நீங்கள், இந்த எதிர்மறை வட்டத்திலிருந்து வெளியேறி, நேரிய சிந்தனையுள்ளவர்களாக உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்

வீட்டுக்கு அடுத்தபடியாக, நல்லொழுக்கங்களையும் நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கும் கேந்திர நிலையங்களாகப் பாடசாலைகளே திகழ்கின்றன. எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் எமக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். அதனாலேயே இன்றும் அவர்களைப் பற்றி நாம் பெருமையுடன் நினைவுகூருகின்றோம்.

இன்றைய காலத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களுக்குச் சிறந்த ஆளுமை இன்றியமையாதது. நேரிய சிந்தனை, சக மனிதர்கள் மீதான இரக்கம், பிறருக்கு உதவும் மனப்பாங்கு, மற்றவர்களை மதிக்கும் பண்பு என்பன உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மிக அவசியமானவை.

மக்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை என்று சொல்லித்தான் எனது தந்தை என்னை வளர்த்தார். ஆனால், இன்று மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய உயரிய பதவிகளில் இருப்பவர்கள் சிலர், தங்களுக்குக் கிடைக்கின்ற அந்தப் புனிதமான சந்தர்ப்பங்களைத் தவறவிடுகின்றார்கள் என்பது கவலையளிக்கிறது.

நாளைய தினம் உயர் பதவிகளுக்கு வரப்போகின்றவர்கள் நீங்கள்தான். அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் எந்தவொரு இலக்கையும் அடைய முடியும். அவ்வாறு நீங்கள் எதிர்காலத்தில் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு வரும்போது, மக்களுக்குச் சேவை செய்யக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று எமது சமூகத்தில் நல்ல விடயங்களை முன்னெடுப்பவர்களும், நன்மை செய்பவர்களுமே அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளாகின்றார்கள். அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகின்றது. இதுவே எமது சமூகத்தின் பழக்கமாகவும் மாறிவருகின்றது.

ஆனால், பிள்ளைகளாகிய நீங்களாவது இத்தகைய விமர்சனங்களைக் கண்டு சோர்வடையாமல், அதிலிருந்து மாறுபட்டவர்களாகவும், சமூக மாற்றத்தின் வித்துக்களாகவும் வளர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.

இந்நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் (பிரதி), விக்டோரியா கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் வரதராஜசர்மா ஸ்ரீகாந்தன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

bri

‘உலகளாவிய கிளர்ச்சி’ முழக்கத்தை எழுப்புபவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

December 18, 2025

பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், ‘இன்டிபாடா’ (Intifada – உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள்

navee

சிட்னி தாக்குதல் பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்டார்!

December 18, 2025

ஆஸ்திரேலியாவில், ‘ஹனுக்கா’ நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்ட நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட 59

in ru

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தவறான பாதையில் செல்வதை இந்தியா எடுத்துச் சொல்ல வேண்டும் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா –

put

ஐரோப்பாவை கடுமையாக எச்சரிக்கும் புடின்

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாரில்லை எனவும் நிலங்களை பலவந்தமாக கைப்பற்ற தயங்கப் போவதில்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி

sim

சிம்பு -ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி?

December 18, 2025

சிலம்பரசன் தற்சமயம் தனது 49 ஆவது திரைப்படமான அரசன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தற்போது

pac

திரைப்பட விருதிற்கான நடுவர் குழு தெரிவு

December 18, 2025

திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு தனியார் அமைப்புகள்

raja

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’

December 18, 2025

நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சஹானா சஹானா’ எனும்

vaa va

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ வெளியாவதில் சிக்கல்…

December 18, 2025

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின்

toro

டொராண்டோவில் நிலப்பரிமாற்ற வரியை உயர்த்த தீர்மானம்?

December 18, 2025

டொராண்டோ மாநகரில் 3 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள சொகுசு வீடுகளை வாங்குபவர்களுக்கான, நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax)

crim

2017 இல் கனடா கியூபெக்கில் இடம்பெற்ற சிறுமியின் மரணம் குறித்த இறுதி அறிக்கை!

December 18, 2025

கியூபெக் மாகாணத்தில் 2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற 7 வயது சிறுமியின் மரணம் குறித்து, மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல்

cana_en

கனடாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்ற இலக்கை எட்ட முடியாது?

December 18, 2025

ஒட்டாவா, கனடா — 2030-ஆம் ஆண்டிற்குள் கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க வேண்டும் என்ற இலக்கை,

warnig

கண்டி – நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

December 18, 2025

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.