‘எதையும் எதிர்க்கும்’ மனப்பாங்கில் மாற்றம் ஏற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – வடக்கு ஆளுநர்

எமது சமூகத்தில் நல்ல விடயங்களை முன்னெடுப்பவர்களும் நன்மை செய்பவர்களுமே அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளாகின்றார்கள். அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் நிறுவுனர் தினமும், லேடி இராமநாதனின் உருவச்சிலை திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அம்பிகை சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘எதையும் எதிர்க்கும்’ மனப்பாங்கில் மாற்றம் ஏற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதிகாரிகளிடம் காணப்படும் எதிர்மறையான போக்குகளும் இந்த சமூக மனோநிலையின் வெளிப்பாடே ஆகும்.

எனவே, எதிர்காலத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கவுள்ள மாணவர்களாகிய நீங்கள், இந்த எதிர்மறை வட்டத்திலிருந்து வெளியேறி, நேரிய சிந்தனையுள்ளவர்களாக உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்

வீட்டுக்கு அடுத்தபடியாக, நல்லொழுக்கங்களையும் நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கும் கேந்திர நிலையங்களாகப் பாடசாலைகளே திகழ்கின்றன. எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் எமக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். அதனாலேயே இன்றும் அவர்களைப் பற்றி நாம் பெருமையுடன் நினைவுகூருகின்றோம்.

இன்றைய காலத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களுக்குச் சிறந்த ஆளுமை இன்றியமையாதது. நேரிய சிந்தனை, சக மனிதர்கள் மீதான இரக்கம், பிறருக்கு உதவும் மனப்பாங்கு, மற்றவர்களை மதிக்கும் பண்பு என்பன உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மிக அவசியமானவை.

மக்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை என்று சொல்லித்தான் எனது தந்தை என்னை வளர்த்தார். ஆனால், இன்று மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய உயரிய பதவிகளில் இருப்பவர்கள் சிலர், தங்களுக்குக் கிடைக்கின்ற அந்தப் புனிதமான சந்தர்ப்பங்களைத் தவறவிடுகின்றார்கள் என்பது கவலையளிக்கிறது.

நாளைய தினம் உயர் பதவிகளுக்கு வரப்போகின்றவர்கள் நீங்கள்தான். அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் எந்தவொரு இலக்கையும் அடைய முடியும். அவ்வாறு நீங்கள் எதிர்காலத்தில் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு வரும்போது, மக்களுக்குச் சேவை செய்யக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று எமது சமூகத்தில் நல்ல விடயங்களை முன்னெடுப்பவர்களும், நன்மை செய்பவர்களுமே அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளாகின்றார்கள். அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகின்றது. இதுவே எமது சமூகத்தின் பழக்கமாகவும் மாறிவருகின்றது.

ஆனால், பிள்ளைகளாகிய நீங்களாவது இத்தகைய விமர்சனங்களைக் கண்டு சோர்வடையாமல், அதிலிருந்து மாறுபட்டவர்களாகவும், சமூக மாற்றத்தின் வித்துக்களாகவும் வளர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.

இந்நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் (பிரதி), விக்டோரியா கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் வரதராஜசர்மா ஸ்ரீகாந்தன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது