உலகளாவிய போர்ச்சூழல்; விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்கு நிவாரணம் அவசியம் – சஜித் பிரேமதாச

தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்துவது, போதுமான கையிருப்புகளைப் பேணிக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியின் போது எரிபொருட்களை முகாமைத்துவம் செய்து கொள்ளல் தொடர்பாக அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதன் பொருட்டு வலுச்சக்தி அமைச்சரிடமிருந்து சில விடயங்கள் தொடர்பில் விரிவான பதில்களை எதிர்பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் முன்வைத்த கேள்விகளாவன,

இந்நாட்டிற்கு எரிபொருட்களை இறக்குமதி செய்து, கப்பலிலிருந்து இறக்கும் நிலை வரையிலும், பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நிலை வரையிலும் ஏற்படும் செலவு ஒவ்வொரு எரிபொருட்கள் வாரியாகவும் எவ்வளவு? அந்த செலவு தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் அதே விலைக்குச் சமமான விலையில் எரிபொருட்களை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் காலங்களில் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகளை நீங்கள் வழங்கினீர்கள். ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கு சமமான விலையில் எரிபொருட்களை இன்னும் கூட வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணம் யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் வரி வகைகள் மற்றும் அவற்றின் அளவுகளும் ஒவ்வொரு எரிபொருட்கள் வாரியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை சூத்திரம் யாது? அவ்வாறெனில், எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் விலைகள் கணக்கிடப்படும் விதம் தொடர்பான விரிவான அறிக்கையை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

நடைமுறையில் காணப்படும் எரிபொருள் விலை சூத்திரத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என நீங்கள் தேர்தல் காலங்களில் பிரஸ்தாபித்திருந்தீர்கள். அவ்வாறே இந்த விலை சூத்திரத்தை மாற்றியமைத்து மக்கள் நலன் சார்ந்த, மக்களுக்கு சார்பான விலை சூத்திரமொன்றை முன்வைப்போம் என்றும் கூறியிருந்தீர்கள். அவ்வாறாயின் அவ்வாறு கூறிய மக்களுக்கு சார்பான விலை சூத்திரத்தை முன்வைக்க முடியாமைக்கான காரணம் யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

இந்நாட்டின் மொத்த நுகர்வுக்குத் தேவையான மதிப்பிடப்பட்ட எரிபொருட்களின் (கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி (Lubricant) மற்றும் விமான எரிபொருள்) அளவுகள் மாதாந்த அடிப்படையிலும் வருடாந்த அடிப்படையிலும் எவ்வளவாக அமைந்து காணப்படுகின்றன? கடந்த மூன்று (03) மாதங்களில் மாதாந்தம் விநியோகிக்கப்பட்ட மேற்கண்ட எரிபொருள் வகைகள் மெட்ரிக் டொன் அடிப்படையில் எவ்வளவு? இந்த காலகட்டத்தில் எரிபொருள் வகைகளுக்கு ஏற்ப பதிவான நுகர்வுகளின் அளவுகள் யாவை?

2026 ஜனவரி முதல் மார்ச் வரை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எரிபொருட்களின் அளவு, கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி மற்றும் விமான எரிபொருள் என்றடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு? இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல் வாரியாக (shipment-wise) எவ்வளவு ? குறித்த கப்பல்கள் இந்நாட்டிற்கு வருகை தந்த திகதிகள் யாவை ? அந்த எரிபொருட்கள் முதுராஜவல மற்றும் கொழும்பு சேமிப்பு களஞ்சிய முனைய வளாகங்களில் இறக்கப்பட்ட அளவுகளை தனித்தனியாக தெரிவிக்க முடியுமா?

இந்நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் வகைகளில் (பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி, விமான எரிபொருள்) சுத்திகரிக்கப்பட்டு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் வகைகள் யாவை? கச்சா எண்ணெயாக இறக்குமதி செய்து இந்நாட்டிலேயே சுத்திகரித்து வழங்கப்படும் எரிபொருட்களின் வகைகள் யாவை? மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும் மேற்கொள்ளப்படும் மொத்த எரிபொருள் இறக்குமதிகள் (refined imports) மற்றும் உள்நாட்டு சுத்திகரிப்பு மூலம் வழங்கப்படும் அளவுகள் தனித்தனியாக எவ்வளவு?

இந்நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்புச் செய்வதன் தற்போதைய நிலை தொடர்பாக, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய இயல் திறன் (capacity) மற்றும் பயன்படுத்தப்படும் உண்மையான அளவு (utilization) எவ்வளவு? இந்த சுத்திகரிப்பு நிலையம் முழு இயல் திறனில் இயங்காவிட்டால், அதற்கான காரணங்கள் யாவை?

அரசாங்கம் இதுவரை கொள்வனவு செய்துள்ள மொத்த எரிபொருட்களின் அளவு எவ்வளவு? இந்த கொள்வனவு வழங்கல்களை மேற்கொள்வதற்கு பொறுப்பெடுத்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் குறித்த நிறுவனங்கள் யாவை? கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களுக்காக இணக்கம் கண்டுள்ள பிரீமியம் (premium) அளவுகள் யாவை? இதுவரை இறக்குமதி செய்யப்ட்ட எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்திய பிரீமியம் அளவுகள் யாவை?

எண்ணெய் விலைகளின் அதிகரிப்புக்கு மத்தியிலும் போர்த்துகல், ஸ்பெயின், துருக்கி, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, இத்தாலி, ஜெர்மன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தமது நாட்டு மக்களுக்காக விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. சேமித்து வைத்துள்ள மேலதிக கையிருப்புப் பணத்தை, தொழிலாள வர்க்கத்தினருக்கும், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.