கிளிநொச்சியில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நினைவில் நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (17.01.2026) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராம் தலைமையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஐபிசி றீச்சா குழுமப் பணிப்பாளர் கந்தையா பாஸ்கரன், சிங்கள எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், ஈழத்து இலக்கிய படைப்பாளிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.