ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்த பின்னணி

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்டியபோது, இஸ்ரேல் எவ்வாறு தெஹ்ரானின் கண்காணிப்பு கெமெரா அமைப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தரவுகளைத் திருடியது என்பது குறித்த தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதன் மூலம் கமேனியின் அன்றாட நடமாட்டங்கள், வாகனங்களை நிறுத்தும் முறை முதல் அவரது பாதுகாவலர்களின் பணி மாற்ற முறைகள் வரையிலான நுணுக்கமான விடயங்கள் மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு, மொசாட் அமைப்பின் ‘8200’ (Eighty-Two Hundred) எனும் பிரிவினால் ஒரு தரவு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று, கமேனியின் அலுவலகத்தின் தொலைபேசித் தொடர்பாடல் கட்டமைப்பிற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு, அங்கிருந்த உளவாளிகளின் உதவியுடன் இத்திட்டம் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு தாக்குதலை ஈரான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பகல் வேளையில் ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதலின் முதல் ஒரு மணித்தியாலத்திலேயே கமேனி கொல்லப்பட்டமை, இத்திட்டத்தின் நுணுக்கமான தன்மையைப் பறைசாற்றுகிறது.

இதேவேளை, இஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள், தெஹ்ரானிலுள்ள ஈரானிய ஆட்சியாளர் வளாகத்திலிருந்த அலி கமேனியின் நிலத்தடி இராணுவப் பதுங்கு குழியை அழித்ததாகக் கூறப்படும் காணொளிகளையும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஈரான் தலைவர் கமேனியைப் படுகொலை செய்யும் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீட்டப்பட்டதாகவும், அதனை 6 மாதங்களுக்குப் பின்னரே நடைமுறைப்படுத்தத் தீர்மானித்திருந்ததாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தெரிவித்துள்ளார். எனினும், அந்த இலக்கை அதற்கு முன்னரே அடைய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்:

“கடந்த ஆண்டு நவம்பரிலேயே கமேனியைக் கொல்லத் தீர்மானித்தோம். இது குறித்து எமது இராணுவம் மற்றும் மொசாட் அமைப்புடன் ஆலோசித்தோம். அதன் பின்னர் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் இது குறித்துப் பேசப்பட்டது.

அந்தச் சமயத்தில்தான் ஈரானில் போராட்டங்கள் தொடங்கின. ஈரான் எங்களை முந்திக்கொண்டு தாக்கும் என்ற சந்தேகம் எமக்கு ஏற்கனவே இருந்தது. அதனுடனேயே இவ்வாறானதொரு நடவடிக்கை அவசியம் என்பது உறுதியானது.”

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது தாக்குதல்களைத் தொடங்கி இன்றுடன் ஒரு வாரமாகிறது.

சுமார் 40 ஆண்டுகள் இரும்புக்கரம் கொண்டு ஈரானை ஆட்சி செய்த ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட 1,332 பேர் இதுவரை நடத்தப்பட்ட பாரிய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

ஈரானிய செம்பிறை சங்கத்தின் தரவுகளின்படி, இப்போரினால் ஈரானில் 3,090 பொதுமக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மருந்தகங்கள் மற்றும் செம்பிறை மையங்கள் உட்பட சுமார் 600 இடங்கள் சேதமடைந்துள்ளன. ஈரானின் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளபடி கடந்த 72 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமானது.

இதேவேளை, ஈரானின் புதிய தலைவரைத் தனது விருப்பப்படியே நியமிக்கப் போவதாகவும், கமேனியின் மகனை அந்நாட்டின் ஆன்மீகத் தலைவராக நியமிக்கத் தான் எதிர்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரானிய இராணுவப் பிரிவினர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் அண்டை நாடுகளின் மீதான தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, அண்மையில் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது நடத்திய தாக்குதலுக்குத் தாங்கள் முதன்முறையாக ஈரானில் தயாரிக்கப்பட்ட ‘கொரம்ஷார்-4’ (Khorramshahr-4) வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

எனினும், ஈரான் நடத்திய எந்தவொரு தாக்குதலாலும் தங்கள் நாட்டிற்குப் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட கொரம்ஷார் ஏவுகணைகள் ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகளாகக் கருதப்படுகின்றன.

அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை, 1.5 டன் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்

drone

நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

March 7, 2026

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத்

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு

crim

நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்; மல்லாவியில் சம்வம்

March 7, 2026

சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (06.03.2026)

photo-collage.png (51)

இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு விழா

March 7, 2026

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று

us

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

March 7, 2026

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் வழக்கம்

jap

கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் ஜப்பானிய கப்பலின் பணியாளர்

March 7, 2026

கொழும்புக்கு அப்பாலுள்ள மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை

sr

சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்!

March 7, 2026

வுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. இலங்கைக்கான

ali ka

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்த பின்னணி

March 7, 2026

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்டியபோது, இஸ்ரேல் எவ்வாறு தெஹ்ரானின் கண்காணிப்பு கெமெரா

kan naga

இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

March 7, 2026

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்று மீண்டும்

i

ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்?

March 7, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட