ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தெஹ்ரானில் நடைபெறவிருந்த கமேனியின் இறுதிச் சடங்குகள் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன என தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறுதிச் சடங்கில் பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த இடத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
1989 இல் கொமெய்னியின் இறுதிச் சடங்கில் சுமார் 10 மில்லியன் மக்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.