காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 46 சிறுவர்கள், உட்பட 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 253 பேர் காயமடைந்துள்ளனர்., மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருள்களின் இருப்பு இல்லாதமையினால், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் காசா இடையே கடந்த 10 ஆம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்று கொள்ளப்பட்டது.
எனினும், போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறியதாக தெரிவித்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 211 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 597 பேர் காயமடைந்துள்ளனர்.